Skip to main content

தோல்வியில் முடிந்த சமாதான பேச்சு...

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 493 விவசாயிகளின் நகைகள் 1790 பவுண் கொள்ளையில் சென்னை நுகர்வேர் நீதிமன்றம் 28 விவசாயிகளுக்கு மட்டும் வழங்க உத்தரவு மீதி நகைகளை பறிகொடுத்த 465 விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  சார்பில் காத்திருக்கும் போராட்டம் தொடர்பாக  தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
 

protest against bank


விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. 

இந்த வங்கியில் சுமார் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளின் நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 25-2-2010-ம் தேதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 493 விவசாயிகள் சுமார் 1790 பவுண் நகைகளை திருநாவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து வங்கியின் நகைகள் கொள்ளை போனது.

இந்த திருட்டு கொள்ளை சம்பவம் நடந்து சுமார் 9 ஆண்டுகள் முடிந்து 10-வது ஆண்டு நடந்து வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியின் மூலமாக இதுவரை திருடுபோன நகைகளை இதுவரை மீட்டு விவசாயிகளுக்கு தரவில்லை. ஆனால் சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் 28 விவசாயிகளுக்கு மட்டும் கூட்டுறவு வங்கியின் மூலமாக நகைகளை திருப்பி தர உத்தரவிட்டதாகவும், அதனால் ஆத்திரமடைந்த 469 விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக 6-11-2019ம் தேதி திருநாவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கியிருந்தனர். 

இதனை அறிந்த உளுந்தூர்பேட்டை தாசில்தார் வேல்முருகன் தலைமையில் சமாதானம் கூட்டம் நடைபெற்றது. இந்த சமாதான கூட்டத்திற்கு உளுந்தூர்பேட்டை உட்கோட்ட டிஎஸ்பி விஜயகுமார், திருக்கோவிலூர் சரக துணை பதிவாளர் தயாளன், திருநாவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் சங்க தலைவர் மார்நோடை சம்பத் ஆகியோர் முன்னிலையில் விவசாயிகள் ராணி, சந்திரசேகர், மணிவண்ணன், கருணாநிதி, செந்தில், கருப்பன், குப்புசாமி, மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஏழுமலை, த.தி.மு.மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன், மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி, DYFI  ஜெயக்குமார் மற்றும் விவசாயிகள், தமிழ்நாடு சங்க பொறுப்பாளர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.


இந்த சமாதானம் கூட்டம் விவசாயிகளுக்கு எந்தவித பலனும் முன்னேற்றமோ பயனளிக்கவில்லை. அதனால் விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சமாதான கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளியே வந்துவிட்டார்கள்.இதனால் சமாதான கூட்டம் தோல்வியில் முடிந்தது.

நகைகளை பறிகொடுத்த ராணி என்பவர் "நாளை 06-11-2019-ம் தேதி காத்திருப்பு போராட்டம் திட்டமிட்டபடி கட்டாயம் நடைபெறும் என்றும் நகைகளை பறிகொடுத்த விவசாயிகளும் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கமும் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார், டிஎஸ்பி மற்றும் டிஆர் முன்பு தெரிவித்து சமாதானம் கூட்டத்தில் இருந்து அவரவர்கள்  சென்றதாக" கூறினார் 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாமக்கல் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
CM MK Stalin fulfilled the demand of the people of Namakkal 

நாமக்கல் மாவட்டம் கடந்த 1997 ஆம் ஆண்டு 2 வருவாய் கோட்டங்கள், 8 வட்டங்கள், 30 வருவாய் பிர்க்காக்களுடன் (Firka) உருவாக்கப்பட்டது. கடந்த 2011 ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் தொகையின் எண்ணிக்கை 17 லட்சத்து 26 ஆயிரத்து 601 ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் 169 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உள்ளிட்ட பிற செயற்பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் சங்கங்களையும் சேர்த்து மொத்தம் 816 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில், நாமக்கல் மாவட்டம், கோழிப்பண்ணை, லாரி பாடி பில்டிங், முட்டை உற்பத்தி, ஆமணக்கு எண்ணெய் பதப்படுத்தும் தொழில் ஆகிய பல முக்கிய தொழில்களுக்கு பெயர் பெற்றதாகும். சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, சேலம் மாவட்டத்தில் 45 கிளைகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 29 கிளைகள் என மொத்தம் 74 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 98.70 கோடி ரூபாய் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 55.15 கோடி ரூபாய் பங்குத்தொகையுடன் இவ்வங்கி செயல்பட்டு வருகிறது. மேலும், 2020-21 ஆம் ஆண்டில் 22.17 கோடி ரூபாய், 2021-22 ஆம் ஆண்டில் 20.37 கோடி ரூபாய் மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் 18.24 கோடி ரூபாய் என தொடர்ந்து லாபம் ஈட்டியுள்ளது.

இத்தகைய சூழலில் சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் செயல்பாட்டு பகுதியில் உள்ள நாமக்கல் மாவட்டதிற்கென ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக்கிட வேண்டும் என்பது இம்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். இதனைப் பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதியும் மற்றும் பல்வேறு தொழில் துறையினர் பயன்பெறும் வகையிலும் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட நாமக்கல் மாவட்டத்திற்கென பிரத்தியேகமாக ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்கிட முதலமைச்சர் ஆணையிட்டார். இந்நிலையில் இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கி இன்று (6.3.2024) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

அதிகாரப் போட்டி; பேரூராட்சி கூட்டத்தில் கடும் வாக்குவாதம்!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
A heated argument between the district president DMK district secretary!

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்ற பிரச்சனையில் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் பேரூராட்சி  தலைவருக்கும் திமுக பேரூர் செயலாளருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி சாதாரண கூட்டம் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அப்போது குறுக்கிட்ட கவுன்சிலரும் திமுக பேரூர் செயலாளருமான விஜி என்ற விஜயகுமார், பேரூராட்சி வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு நிதி வருகிறது. வரும் நிதிகளை திட்டப் பணிகளாகப் பிரிப்பது தொடர்பாக யாரை கேட்டு முடிவு எடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த தலைவர் செல்வராஜ், 'நீ வேண்டுமானால் தலைவராக இருந்து கொள். நான் எழுதித் தருகிறேன்' என்று ஆவேசமாக பேச, இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் இருவரும் ஒருமையில் பேசிக்கொள்ள, பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. பின்னர் இருவரும் சமாதானம் அடைந்து பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்றினர். பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பேரூராட்சி பகுதியில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்ற போட்டி தற்போது பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் வெடித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.