Skip to main content

மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத அதிமுக குமரகுரு...

Published on 20/09/2019 | Edited on 13/12/2019

கடந்த ஜனவரி 8ந் தேதி விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை அறிவித்து உள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணைநல்லூர் அரசூர், மடப்பட்டு, திருநாவலூர், திருக்கோவிலூர், முகையூர் ஆகிய பகுதிகள் விழுப்புரத்தில் இருந்து 6 கிலோமீட்டர் முதல் 25 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த ஊர்பகுதிகள் விழுப்புரத்துடன் ஒட்டி உள்ளதால் 10 நிமிட பயணத்தில்  சென்று வரும் நிலையில் உள்ளது. இந்தப் பகுதிகளை கள்ளக்குறிச்சியுடன் இணைத்தால் 100கிமீ தூரம், ஒருநாள் பயண நேரம் ஆகும். இதனால் மக்களின் எதிர்கால வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கேள்விக்குறியாகிவிடும் என்பதனால் இந்த பகுதிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு இணைக்க வேண்டாம். விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்பு இருக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இப்பகுதி மக்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம், மனித சங்கிலி கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு பிரச்சாரம், கருத்துக்கேட்பு கூட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் விழுப்புரம் வேண்டுமென்று மனு கொடுத்தும் கலெக்டர் அமைச்சர் முதலமைச்சர் ஆகியோரிடம் மனு கொடுத்தும் கோரிக்கை வைத்தும் இந்தப் பகுதிகளை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டி கடந்த 8மாதமாக இப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

  

protest


அரசின் கொள்கை ரீதியாக மக்கள் நலன் கருதி ஒரு புதிய மாவட்டம் மாவட்டத்தின் தலைநகர் அருகே உள்ள பகுதிகளை ஒருங்கிணைத்து மக்கள் வசதிக்காகவும் அரசின் நிர்வாகம், வருவாய்துறை, சுகாதாரம், மின்வசதி, ஊரக வளர்ச்சி துறை, சாலை போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை  சிறப்பாக செய்யவும் மக்கள் வசதிக்காகவே புதிய மாவட்ட தலைநகர் உருவாக்கப்படுகிறது.

 

விழுப்புரம் மாவட்டம் தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து கடந்த  1993ல் தனிமாவட்டமாக உருவானது. 11 சட்டமன்ற தொகுதி, 9ட்டங்கள் 22ஊராட்சி ஒன்றியம் கொண்ட மாவட்டமாகும்.


கல்வராயன்மலை  பகுதி மக்கள் விழுப்புரம் தலைநகர் செல்ல 100கி.மீ தூரம் ஒருநாள் பயணதூரம் ஆகிறது. தற்போது அதே நிலைதான்  விழுப்புரம் தலைநகர் அருகே உள்ள பேரங்கியூர், இருவேல்பட்டு, அரசூர், காரப்பட்டு, பொய்கையரசூர், டி.குமாரமங்கலம், மேல்தணியாலம்பட்டு, ஆனத்தூர், சேமங்கலம், ஆலங்குப்பம் கிராமம், கீரிமேடு, அரும்பட்டு, மாமந்தூர், காந்தலவாடி, கருவேப்பிலைபாளையம், மடப்பட்டு, சிறுத்தனூர், சிறுளாப்பட்டு, திருநாவலூர், கெடிலம், மேட்டத்தூர், பரிக்கல், குவாகம், பெரியசெவலை, திருவெண்ணெய்நல்லூர், ஏமப்பூர், சிறுவானூர், ஏனாதிமங்கலம், மாரங்கியூர், பையூர், பை.சேத்தூர், சிறுமதுரை, சித்திலிங்கமடம் மற்றும்  திருக்கோவிலூர் பகுதி மக்கள் இங்கிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கள்ளகுறிச்சிக்கு செல்லும் அவலம் வரும். கள்ளக்குறிச்சியுடன் இணைக்கும் போது மக்கள் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் பெரும் தடையாகவும். கள்ளக்குறிச்சியுடன் இப்பகுதிகளை  இணைப்பது மக்கள் நலனில் அக்கறை இல்லாத செயலாகும்.

மக்கள் நலனில் அக்கறை கொண்டு விழுப்புரம் அருகே உள்ள பேரங்கியூர், ஏனாதிமங்கலம், பை.சேத்தூர், மாரங்கியூர், அரசூர், ஆனத்தூர், மடப்பட்டு, கெடிலம், திருநாவலூர், திருவெண்ணெய்நல்லூர், திருக்கோவிலூர், முகையூர் ஆகிய பகுதிகளை விழுப்புரம் மாவட்டத்துடன் தொடந்து இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

இதுபற்றி திருவெண்ணய் நல்லூர் ஒன்றிய மக்களின் மனநிலை என்ன என்பதை அவர்களிடமே கேட்டோம். கடந்த ஜனவரி மாதம் முதல் எங்கள் பகுதியை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க கூடாது என்பதற்காக போராடி வருகிறோம் அரசும் அதிகரிகளும் மெளனமாகவே உள்ளனர் எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு தரவில்லை என்கிறார் அரும்பட்டு மணிகண்டன். மாவட்டம் பிரிப்பது மக்கள் வசதிக்காகத் தான் அதே நேரத்தில் 10 கிலோ மீட்டர் தூரத்தில் எங்கள் மாவட்ட தலை நகரமான விழுப்புரம் உள்ளது அதை விடுத்து 100 கிலோ மீட்டர் தூரமுள்ள கள்ளக்குறிச்சியில் இணைக்க பார்க்கிறார்கள் அதிகாரிகள். இதற்காக பல போராட்டங்கள் நடத்தியும் கூட எதையும் கண்டுகொள்ளாமல் கள்ள மெளனம் சாதிக்கிறார்கள் இதில் அரசியல் உள்நோக்கமும் உள்ளது எனவே எங்கள் பகுதியில் 50 க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன அவை திருக்கோவிலூர் - உளுந்தூர்டேட்டை தாலுக்காவில் உள்ளன அவைகளை ஒருங்கிணைத்து திருவெண்ணைநல்லூரை தனி தாலுக்கா வாகஅறிவிக்க வேண்டும் அது வரை எங்கள் போராட்டங்களை தொடர்வோம் என்றார் முருகன்.

இதில் என்ன அசியல் உள்நோக்கம் உள்ளது என விழுப்புரம் மாவட்ட இணைப்பு குழுவில் உள்ள வழக்கறிஞர் சோலையப்பனிடம் கேட்டோம். எங்கள் பகுதி விழுப்பு ரத்துடன் தான் தொடர வேண்டும் என கடந்த ஜனவரி முதல் 2700 புகார்மனுக்கள் அனுப்பியுள்ளோம். 3000 அஞ்சல் அட்டை புகாரும் கிராமங்களில் கருப்பு கொடி ஏற்றியும். மனித சங்கிலி, என பல போராட் டங்கள் நடந்துள்ளன இதற்க்காக எங்கள் குழுவினர்15 பேர் மீது காவல்துறைவழக்கும் போட்டுள்ளது அது மட்டுமா? தொகுதி திமுக எம் எல் ஏ பொன்முடி யிடம் புகார் மனு, அதிமுக ம.செ.வும் எம்எல்ஏவுமான குமரகுருவிடம் புகார் மனு, முதல்வரின் மிக நெருங்கிய நண்பர் வேறு மேலும் மாவட்ட மந்திரி சண்முகத்திடம் மனு, இப்படி தொடர் மனு தொடர்போராட்டத்திலும்முயர்ச்சியிலும் உள்ளோம்.

ஆனால் யாருமே உரிய பதிலை சொல்லவில்லை. இதற்கு காரணம் அரசியல் உள்நோக்கம். குமரகுரு கட்சியின்மாவட்ட எல்லையிலும் அவர் எம்எல்ஏவாக உள்ள உளுந்தூர்பேட்டை பகுதி கிராமங்கள் பல இதில் உள்ளன. அதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு இணைப்பதில் அவர் விருப்பமாக உள்ளார். தி மு க பொன்முடியோ பிப்ரவரி 6ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட பிரிவினை ஆலோசனை கூட்டத்தில் பேசியபோது, மக்கள் கருத்தை கேட்டு அதன் படி மாவட்டதலைநகரத்தின் அருகாமையில் உள்ள பகுதிகளை விழுப்புரத்தோடு இணைக்க வேண்டும் மக்கள் விருப்பத்திற்க்கு மாறாக அதிகாரிகள் செயல்பட கூடாது என்றார். அதன் பிறரு இந்த பிரச்சினையில் பொன்முடி  ஆர்வம் காட்டவில்லை என்கிறார் சோலையப்பன்.

கள்ளக்குறிச்சியோடு இணைவது பற்றி சீரியசாக எடுத்து கொள்ளவில்லை. இவரிடம் மனு கொடுத்தபோது நான் சொன்னால் எந்த அதிகாரியும் கேட்பதில்லை என்கிறார் சலிப்புடன். மக்களின் பல பிரச்சினைகளுக்கங்க மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் கொடுத்துள்ளார் போராட்டமும் நடத்தியுள்ளார் நடத்திய பொன்முடி. இதை மட்டும் கண்டுகொள்ளாமல் தட்டி கழிக்கிறார் அதிமுக குமரகுரு -   இதில் அரசியல் ஆதாயம் காண முயலுகிறார்  என்கிறார் காட்டமாக சோலையப்பன் - இது ஒரு பக்கம் என்றால் பிப்ரவரி 6ல் நடந்த ஆலோசனை கூட்டத்தில் திருநாவலூர் பகுதியை சேர்ந்த 2000 பேர்கள் எங்கள் பகுதி விழுப்புரத்திலேயே இருக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்ஆனால் இப்போது திருநாவலூர் ஒன்றியத்தை கள்ளக்குறிச்சியில் சேர்க்க வேண்டும் என்று பல கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாவட்ட பிரிவினை மக்களிடையேயும் அரசியல்வாதிகளிடமும் பல பிரிவினைகளை ஏற்ப்படுத்தியுள்ளது. இதற்கெல்லாம் காரணம் அரசியல்வாதிகளா? அதிகாரிகளா? 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.