Skip to main content

டிஎன்பிஎஸ்சியால் பதவி உயர்வு தடைப்படுகிறது - காவல்துறையினர் வேதனை 

Published on 09/03/2021 | Edited on 09/03/2021

 

Promotion blocked by TNPS

 

தமிழகத்தில் எத்தனை துறைகள் இருந்தாலும், அவற்றில் மிகவும் முக்கியமானதும், கவனிக்கப்பட வேண்டியதும் என்ற பட்டியலில் காவல்துறையும் சிறைத்துறையும் உள்ளன. அரசுப் பணிகளில் உள்ளவா்களுக்குப் பல்வேறு சங்கங்கள் உண்டு. அதன் மூலம் தங்களுடைய தேவைகளைப் போராட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்கின்றனா். ஆனால் இந்தக் காவல்துறையும், அதனைச் சார்ந்திருக்கும் சிறைத்துறையும் பரிதாபத்திற்கு உரியவைதான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

 

தமிழகத்தில் மொத்தம் ஆண்களுக்கான 9 மத்திய சிறைகளும், பெண்களுக்கான 3 மத்திய சிறைகளும், 18 முதல் 25 வயது வரையிலானவா்களுக்கு ஒரு சிறை பள்ளியும் உள்ளன. அதில் தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான சிறைக்காவலா்கள் பணியாற்றி வருகின்றனா். தற்போது சிறைத்துறையில் பதவி உயா்வு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. ஒரு பணியில் குறிப்பிட்ட சில வருடங்கள் பணியாற்றிய பிறகு, தற்போது இருக்கும் நிலையில் இருந்து சற்று அடுத்த நிலைக்கு முன்னேறிப் போக வேண்டும் என்ற எண்ணம் எல்லாருக்கும் இருக்கும். 

 

அப்படிபட்ட நிலையில் பதவி உயா்வு வழங்காமல் நேரடி பணி நியமனம் செய்வதால் பதவி உயா்வு பெற்று அடுத்த நிலைக்கு முன்னேற வேண்டிய சிறை காவலா்கள், கடைசி வரை ஒரு குறிப்பட்ட நிலையில் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்று விடுகின்றனா். அவா்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயா்வு முறையாக கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நாம் விசாரித்தபோது, “சிறைத்துறையில் பணிக்கு சேரும் காவலா்கள் 2ஆம் நிலை காவலா்களாக பணிக்கு சோ்ந்து, ஒவ்வொரு 10 வருடத்திற்கும் ஒரு பதவி உயா்வு பெற்று அதிகபட்சமாக சிறைத்துறை துணைத் தலைவர் வரை பதிவு உயா்வு பெறுவார்கள்.

 

Promotion blocked by TNPS

 

இதில் ஒருவர், 2ஆம் நிலைக் காவலராக பணிக்கு சோ்ந்தால், அடுத்த 10 வருடத்தில் முதல் நிலைக் காவலராக பதவி உயா்வு பெறுவார். அடுத்ததாக 15வது வருடத்தில் உதவி சிறை அலுவலராக பதவி உயா்வு பெறுவார். அதன் பிறகு அந்த இடத்தில் பணியிடம் காலியாக இருந்தால் துணை சிறை அலுவலா் பதவிக்கு வர முடியும். அதன் பிறகு பதவி உயா்வு பெற்று சிறை அலுவலர், சிறை கூடுதல் கண்காணிப்பாளா், கண்காணிப்பாளா், சிறைத்துறை துணைத் தலைவர் வரை பதவி உயா்வு பெற முடியும். ஆனால் தற்போது அரசு நடத்தும் டி.என்.பி.எஸ்.சி தோ்வில் வெற்றிபெறக்கூடியவா்கள் நேரடியாக உதவி சிறை அலுவலா் பணிக்கு வந்துவிடுவதால், ஏற்கனவே பணி மூப்பு அடிப்படையில் பதவி உயா்வுக்காக காத்திருப்பவா்களின் நிலை கேள்விக்குறியாகி விடுகிறது.

 

இதனால் அவா் கடைசி வரை அதே நிலையில் இருந்து ஓய்வுபெற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார். தோ்வு எழுதி நேரடியாக பணியமர்த்தப்படுபவா்கள் விரைவில் துணை சிறை அலுவலா் பதவிக்கு முன்னேறி விடுகின்றனா். ஆனால் பணி மூப்பு அடிப்படையில் காத்திருப்பவா்கள் அதன்பிறகு உதவி சிறை அலுவலா் பணிக்கு வர முயற்சித்தாலும் வர முடியாமல், அடுத்து புதியதாக தோ்வு செய்யப்படுபவா்கள் அந்த இடத்திற்கு வந்து விடுகிறார்கள். எனவே தங்களுடைய சிறை பணியை 2ஆம் நிலைக் காவலா் பணியில் துவங்கி சிறைத்துறை துணைத் தலைவர் பதவி வரை உயா்வு பெற வேண்டியவா்கள், முதல்நிலை காவலா் பதவியை விட்டுத் தாண்ட முடியவில்லை என்று கூறுகின்றனா்.

 

தற்போது 2021ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் பரவலாக உள்ள சிறைகளில் கிட்டதட்ட 250க்கும் மேற்பட்ட சிறை காவலா்கள் பல்வேறு தகுதியில் இருந்து அடுத்த நிலைக்கு பதவி உயா்வு பெற காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு இதுவரை பதவி உயா்வு வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே பதவி உயா்வு பெற வேண்டிய தாங்கள், நேரடி பணி நியமனத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறோம் என்று கூறுகின்றனா். எனவே இந்தப் பதவி உயா்வு விவகாரத்தில் தமிழக அரசும், சிறைத்துறை தலைவர் சுனில் குமார் சிங் உள்ளிட்டோரும் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயா்வுக்காக காத்திருக்கும் சிறை காவலா்களுக்கு ஒரு நல்ல முடிவை வழங்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.