Skip to main content

கடன் தருவதாக கூறி மோசடி... 2 கோடியை சுருட்டிய கும்பல்!

Published on 20/10/2020 | Edited on 20/10/2020
ரகத

 

 

ஈரோடு  மாவட்டம் பவானியில் தனிநபர் மற்றும் குழு கடன் வழங்குவதாக கூறி ஆயிரத்துக்கு மேற்பட்டோரிடம் 2 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுவதாக கூறி ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் பாளையத்தில் சன் மைக்ரோ பைனான்ஸ் என்ற நிறுவனம் சென்ற 23 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் பவானி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தனிநபர் கடனாக  ஒரு லட்ச ரூபாய் முதல் 3 லட்ச ரூபாய் வரையும், குழு கடனாக நபர் ஒருவருக்கு தலா 45 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தனர். இதற்காக தனிநபர் கடன் வழங்க  டெபாசிட் தொகையாக  15 ஆயிரம் ரூபாயும், இன்சூரன்ஸ் தொகை 2500 வழங்கினால் தனிநபர் கடன் வழங்கப்படும் என்றும், குழு கடன் வழங்க இன்சூரன்ஸ் தொகை தலா 1250 ரூபாயும் வழங்கினால் 1 சதவீதம்  முதல் 1.5 சதவீதத்தில் கடன் வழங்கப்படும் என சன் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் அறிவித்தது.

 

இதனையடுத்து கடனாக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிநபர் கடன் வேண்டியும்,  குழு கடன் வேண்டியும் 2 கோடி வரை அந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்து இருந்தனர். இவர்களுக்கு 21 ந் தேதி புதன்கிழமை கடன் வழங்கப்படும் என அறிவித்திருந்த நிறுவனம் ஒரு நாள் முன்பே 19 ந் தேதியே திடிரென நிறுவனத்தை காலி செய்துவிட்டு எல்லோரும் எஸ்கேப் ஆகிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். கடன் வழங்குவதாக கூறி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள்; கள்ளக்குறிச்சியில் துணிகரம்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Robbery with metal detector; Venture in Kalakurichi

கள்ளக்குறிச்சியில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நூதன முறையில் எந்த பகுதியில் நகைகள் உள்ளது என கண்டறிந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள எஸ்.வி.பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருள்ஜோதி. அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களால் 67 சவரன் நகை மற்றும்  23 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வந்த நிலையில், வளவனூர் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவர் அவருடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உதயா மற்றும் மாரி ஆகிய இருவரை கைது செய்த போலீசார், உருக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த கொள்ளை அடிக்கப்பட்ட 25 சவரன் தங்கத்தை கைப்பற்றினர். மேலும் 2 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் தங்க நகை எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மெட்டல் டிடெக்டரை பயன்படுத்தி இவர்கள் கொள்ளையடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

அடுத்தடுத்து மூன்று கடைகளில் கொள்ளை;போலீசார் விசாரணை

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
Robbery in three shops in succession; police investigation

ஈரோட்டில் மூன்று கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர். இவர் அந்த பகுதியில் துரித உணவு கடை வைத்திருந்தார். நேற்று இரவு 12 மணியளவில் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் சாவியை திறந்து அதில் இருந்த ரூ.3000 பணம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது.

அதனருகே உள்ள மற்றொரு குளிர்பான கடையின் பூட்டை  உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பணம் இல்லாததால் திரும்பிச் சென்று விட்டனர். குளிர்பானம் கடை அருகே ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்றவர் இன்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 26 ஆயிரம் ரொக்க பணம் திருட்டுப் போய் இருந்தது.

இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருப்பது அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.