Advertisment

இறால் குஞ்சு பொரிப்பகதிற்கு தடை-கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகாவில் உள்ள மரக்காணம் ஒன்றியத்தில் கீழ்பேட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் மீனவ குப்பத்தில் இறால் குஞ்சு பொரிப்பகத்திற்கு தடைசெய்ய கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் முடிவுசெய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

Prohibition on shrimp farming- Resolution at the village council meeting

இதனால் குடிநீர்உப்புநீராகவருவதாகவும் அதிலிருந்து வரும்கழிவால் புற்றுநோய் உட்படஏற்படுவதால் இதனால் எண்ணற்ற நோய் வகைகள் பரவுகிறது. 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் புற்றுநோய் பல்வேறு மர்ம நோய்கள் ஏற்பட்டு அவதிப்படுவதால் நிறுவனங்களை தடை செய்ய கோரியும், கிராமத்தின் சார்பில் பொதுமக்கள் மற்றும் அனைத்து மக்களும் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்செய்வது என கூட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆகியோர் தீர்மானம் நகல் வழங்கப்பட்டு, 19 மீனவர்கிராமத்தில் இறால் குஞ்சு பொரிப்பகத்தை தடைசெய்ய ஒட்டுமொத்தம் கிராம சபை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுபோல் இதில்,செட்டி குப்பம், செட்டி நகர்,கூனிமேடு, ரங்கநாதபுரம், மஞ்சக்குப்பம், கீழ்புத்துப்பட்டு, முதலியார்குப்பம் ஆகிய 19 மீனவ கிராமங்களில் இறால் பொரிப்பகம் கம்பெனிகளுக்கு தடை செய்வது என தீர்மானம் போடப்பட்டது. மரக்காணம் வட்டாட்சியரிடம்இந்தத் தீர்மான நகல் வழங்கப்பட்டது. இது சம்பந்தமாக நடவடிக்கை இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் செய்யப்படும் என கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டது.

sea village meeting Viluppuram
இதையும் படியுங்கள்
Subscribe