Skip to main content

சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த தடை! எதிர்ப்பு தெரிவித்து கடலுக்குசெல்ல மீனவர்கள் மறுப்பு!

Published on 02/08/2019 | Edited on 02/08/2019

கடலூர் மாவட்ட கடற்கரையோரத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளன. விசைப்படகு, கண்ணா படகு, பைபர் போட், கட்டுமரம் என 6 ஆயிரத்திற்கும் அதிகமான படகுகள் உள்ளன. இதில் கடலூர் அருகேயுள்ள தேவனாம்பட்டினம், தாழங்குடா, சொத்திக்குப்பம், எம்.ஜி.ஆர் திட்டு உட்பட 13 கிராம மீனவர்கள் சுருக்கு மடி வலைகளை  பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். அவ்வலைகளை பயன்படுத்துவது தொடர்பாக இரு தரப்பு  மீனவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 29 ம் தேதி பரங்கிப்பேட்டை, அன்னங்கோவில் முகத்துவாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 படகுகள் சுருக்கு வலையுடன் தீ வைத்து எரிக்கப்பட்டன.

 

Prohibited to use of collapsible fold nets! Fishermen refuse to go to sea protesting


அதையடுத்து மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவியதால் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டிருந்தார். அதனால் கடலூர் மாவட்ட மீனவர்கள்  இரண்டு நாட்கள்  கடலுக்கு செல்லவில்லை.

இந்நிலையில் அரசால் அனுமதிக்கப்பட்ட வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கலாம் என நேற்று முன் நாள் ஆட்சியர் மறு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் சுருக்கு வலையை பயன்படுத்த அனுமதிக்காவிட்டால் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல மாட்டோம் என பெரும்பாலான மீனவர்கள் தெரிவித்தனர்.   

 

Prohibited to use of collapsible fold nets! Fishermen refuse to go to sea protesting

 

கடலூர் துறைமுகம் பகுதியில் நேற்றும், இன்றும் விசைப்படகில் அனுமதிக்கப்பட்ட வலைகளுடன் குறைந்த அளவிலான மீனவர்கள் மட்டுமே கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். சுருக்கு வலையை பயன்படுத்தும் கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, நல்லவாடு, எம்.ஜி.ஆர் திட்டு உள்ளிட்ட பல கிராம மீனவர்கள் இன்று நான்காவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அதனால் அப்பகுதிகளில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் கடலோர பாதுகாப்பு படை போலீசார் படகு மூலம் கடலில் ரோந்து பணயில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவ கிராமங்களிலும் தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.