Advertisment

முட்டைகோஸ் மூடைகளுக்கு இடையே கிலோ கணக்கில் சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருட்கள்!

Prohibited items stuck in kilos between cabbage wraps

திருச்சியில் தொடர்ந்து உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி புகையிலை,குட்காஉள்ளிட்ட போதைவஸ்துக்களைபறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் வெளிமாநிலங்களிலிருந்துதமிழகத்திற்கு மாவட்டம் வாரியாக கொண்டு சேர்க்கப்படும் இந்த புகையிலைகுட்காஉள்ளிட்டவை கடைகளில் விற்பனைக்கு வரும்போது அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

Advertisment

ஆனால் தற்போது திருச்சியில் வாகன சோதனையின்போது 30 லட்சம் ரூபாய் மதிப்பிலானகுட்காபுகையிலை உள்ளிட்ட போதை வஸ்துக்கள் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டுள்ளது. திருச்சி சஞ்சீவிநகர்ப்பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மைசூரிலிருந்துமுட்டைக்கோஸ்ஏற்றி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர்.

Advertisment

அப்போது வாகனத்திற்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தமுட்டைகோஸ்மூடைகளுக்கு இடையே கிலோ கணக்கில்குட்கா, புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்கள்இருந்ததைக்காவல் துறையினர் கண்டுபிடித்துஅவற்றைப்பறிமுதல் செய்தனர். மேலும் ஒருடன்அளவிலான இந்த போதை வஸ்துக்களின் மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. வாகனத்தை ஓட்டிவந்தஓட்டுனர்மற்றும்வாகனங்களைப்பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதை வஸ்துக்கள் திருச்சி நகருக்குள் எங்கெல்லாம் கொண்டு சேர்க்கப்படுகிறது என்றவிவரங்களைக்கேட்டறிந்து வருகின்றனர்.

Cannabis smuggled trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe