Skip to main content

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை!; பாறைகள் உருண்டு வந்ததால் முன்னெச்சரிக்கை!!

Published on 01/05/2019 | Edited on 01/05/2019


கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில், தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வனத்துறையினர் திடீரென்று தடை விதித்துள்ளனர்.

 

 prohibited to go to the agaya kangai waterfall; Precautions because the rocks rolled !!


நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வளப்பூர்நாடு பகுதியில் அண்மையில் பெய்த மழையால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டியது. இதனால், சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். 

 


இந்நிலையில் கோடை விடுமுறையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு படையெடுத்து வருகின்றனர். கடந்த சில நாள்களாக கொல்லிமலையில் மழை இல்லாததால், மாசிலா அருவி, நம் அருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி ஆகியவை வறண்டுள்ளன. 

 


இதுமட்டுமின்றி, ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி அருகே, நீர்மின் திட்டத்திற்காக சுரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக மலைப்பகுதியில் உள்ள பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு வருகிறது. கடந்த இரு நாள்களுக்கு முன், பாறைகளை தகர்ப்பதற்காக வைத்த வெடி வெடித்ததில், கற்கள் சிதறி நீர்வீழ்ச்சியில் விழுந்தன. அப்போது நீர்வீழ்ச்சிக்கு கீழே நின்றிருந்த சுற்றுலா பயணிகள் இருவர் மீது கற்கள் விழுந்ததில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். 

 


இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீர் வறண்டுள்ள நிலையில், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.


கற்கள் விழுந்தது மட்டுமின்றி, சுற்றுலா பயணிகள் 1300 படிக்கட்டுகள் வரை கீழே இறங்கிச்சென்று, நீர்வீழ்ச்சியில் நீர் கொட்டாததைக் கண்டு ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என்ற எண்ணத்திலும் இவ்வாறு தடை விதித்துள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை! 

Published on 01/10/2023 | Edited on 01/10/2023

 

Bathing in Courtalam main waterfall prohibited
கோப்புப்படம்

 

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

 

அதே சமயம் தொடர் விடுமுறை மற்றும் பள்ளி மாணவர்களுக்குக் காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் மெயின் அருவிகளில் குளிக்க வந்திருந்தனர். இந்த சூழலில் இந்த தடை உத்தரவின் மூலம் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். 

 

 

Next Story

வீடியோவிற்காக அருவியில் குதித்த இளைஞர் பாறை இடுக்கில் சிக்கி உயிரிழப்பு

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

A youth who jumped into a waterfall for a video got trapped in a rock and LOst their live

 

திருப்பதி அருகே உள்ள அருவியில் குளித்த பொழுது சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் வீடியோ எடுக்கும் ஆர்வத்தில் பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

சென்னை சேர்ந்த சுமந்த் என்ற கல்லூரி மாணவர் தன்னுடன் படிக்கும் திருப்பதியைச் சேர்ந்த மாணவர்களுடன் சேர்ந்து சுற்றுலா செல்லத் திட்டமிட்டார். அதன்படி கல்லூரி விடுமுறையில் அவர்கள் திருப்பதி அருகே உள்ள தலாகோணா அருவியில் குளிக்கச் சென்றனர். அப்பொழுது சுமந்த் வீடியோ எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அருவியின் மேல் பகுதியிலிருந்து குதித்தார். ஆனால் சில நிமிடங்களாகவே அவர் வெளியே வராததால் நண்பர்கள் அவரை தேடினர். ஆனால் இறுதியில் அவர் பாறையில் சிக்கி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் எரவாளிபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புக் குழுவினருடன் சேர்ந்து பாறை இடுக்கில் சிக்கிய சுமந்தின் உடலை கைப்பற்றினர்.

 

வீடியோ எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அருவியில் குதித்து பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்த மாணவர் சுமந்தின் உடலை பார்த்து சக மாணவர்கள் கதறி அழுதனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.