Skip to main content

அனைவரும் தமிழர்கள் என்ற ஒரே உணர்விற்காக திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட நிகழ்ச்சி மீண்டும் செயல்படும்! - கனிமொழி

Published on 17/11/2021 | Edited on 17/11/2021

 

The program started under the DMK regime for the same feeling that all are Tamils ​​will be active again!

 

நாட்டுப்புறக் கலைஞர்களால் நடத்தப்படும் 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உறுதியளித்துள்ளார்.

 

கடந்த திமுக ஆட்சியின்போது, தமிழக அரசு சார்பில், பழம்பெரும் நாட்டுக் கலைகளை வளர்த்தெடுக்கவும் கலைஞர்களுக்கு உற்சாகமூட்டவும் ‘சென்னை சங்கமம்’ எனும் பெயரில் கலை நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், தை முதல் நாள் தொடங்கப்படும் இந்த விழா ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்படும். 

 

கிராமிய கலைகளை வளர்க்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் அனைவரும் தமிழர்கள் என்ற ஒரே உணர்விற்காகவும், சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், தெருக்கூத்து, பாவைக் கூத்து, கும்மி ஆட்டம், தாரைத் தப்பட்டை, மயிலாட்டம், பொம்மலாட்டம், கொம்பு இசை, பறையாட்டம், கிழவன் - கிழவி ஆட்டம், காவடி ஆட்டம், புலி ஆட்டம், கோலாட்டம், கோமாளிக் கூத்து ஆகியவை இடம் பெற்றிருந்தன. அதேபோல் சிலம்பம், வாள் வீச்சு, உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் போன்ற தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளும் இடம் பெற்றிருந்தன.

 

மேலும், திருநெல்வேலி, இருட்டுக் கடை அல்வா, மணப்பாறை முறுக்கு, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் பிரியாணி, பள்ளிப்பாளையம் சிக்கன், காரைக்குடி இட்லி போன்ற தமிழகத்தில் புகழ்பெற்ற அத்தனை உணவு வகைகளும், சங்கமத்தில் சங்கமித்திருந்தன. 2007-ல் தொடங்கப்பட்ட இந்த சங்கமம், அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறுத்தப்பட்டது. அதையடுத்து, சுமார் பத்தாண்டு காலம் இந்த சங்கமம் கிடப்பில் போடப்பட்டது. 

 

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடைபெறாமல் உள்ளதால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாக நாட்டுப்புறக் கலைஞர்கள் வேதனை தெரிவித்து வந்தனர். இதையடுத்து, பலரும், சென்னை சங்கமம் மீண்டும் நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துவந்தனர். திமுக ஆட்சிக்கு வந்ததும், கரோனோ பாதிப்பு தணிந்த பிறகு சென்னை சங்கமம் மீண்டும் நடத்தப்படும் என ஏற்கனவே கனிமொழி உறுதி அளித்திருந்தார். 

 

இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியைச் சந்தித்த கிராமிய கலைஞர்கள் சிலர், சென்னை சங்கமம் நிகழ்ச்சியை மீண்டும் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற கனிமொழி, முதல்வரிடம் இதுகுறித்து தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.