ADVERTISEMENT

அவதூறு பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

03:22 PM Apr 17, 2018 | kalaimohan

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு நடத்தி செல்லும் போக்கில் பேசிய பேராசிரியர் நிர்மலாதேவியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கல்லூரி மாணவிகள் நால்வரிடம் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தும் வகையில், தவறான முறையில் பேசிய ஆடியோ வெளியாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு நேற்று கைதுசெய்யப்பட்டு விடிய விடிய போலீசார் விசாரித்து வந்தனர்.

ADVERTISEMENT



இதன் அடுத்தகட்டமாக இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மூன்று செல்போன்களில் பல்வேறு பெண்களின் புகைப்படங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதில் மேலும் ஒரு புது திருப்பமாக இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்ற டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT