கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, உதவி பேராசிரியர் முருகன் ஆகியோரை இன்று ஆஜராகுமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவையடுத்து பேராசிரியை நிர்மலாதேவி, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இந்த வழக்கில் உதவி பேராசிரியர் முருகன் இன்று ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை 16.09.2019க்கு ஒத்திவைத்து அன்றைய தினம் மூவரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.