Advertisment

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; தனிமையில் அழைத்த பேராசிரியர்!

Professor misbehave with college girl in trichy

திருச்சி தனியார் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் மாணவியிடம் அத்துமீறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருச்சியில் பிரபல தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. திருச்சி மாநகரின் முக்கிய கல்லூரியாக விளங்கும் இந்த கல்லூரியில் தமிழ்நாட்டின் பல பகுதியில் இருந்து மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் தமிழ்செல்வன் என்பவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து படுக்கையறைக்கு அழைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisment

இதனைத் தொடர்ந்து பேராசிரியர் தமிழ்செல்வனிடம் சமூக நலத்துறை மற்றும் காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாணவர்கள் போர்க்கொடித் தூக்கியுள்ளனர். மேலும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் எனவும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். இதனிடையே பேராசிரியர் தமிழ்செல்வனை கல்லூரி நிர்வாகம் சஸ்பண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே இதே கல்லூரியில் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன், பேராசிரியர் நளினி ஆகியோர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

students trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe