Skip to main content

பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு:  துணை வேந்தர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு!

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

 

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் கடந்த 2015 - 2017  காலக்கட்டத்தில் முறைகேடாக பேராசிரியர்கள் நியமனம் செய்ததாக முன்னாள் துணை வேந்தர் பாஸ்கரன், பதிவாளர் முத்துக்குமார் உள்பட நான்கு பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

Professor



தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தில் கடந்த 2015 - 2017ம் ஆண்டு வரை துணை வேந்தராக ஜி.பாஸ்கரன் பதவி வகித்தார். அந்த காலக்கட்டத்தில் தகுதியற்றவர்களை, விதிமுறைகளை மீறி பேராசிரியர் பணிகளில் நியமனம் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பின்னர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொள்ள மதுரை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டது.


 

இதையடுத்து கடந்த 14ம் தேதி முறைகேட்டில் ஈடுபட்ட முன்னாள் துணை வேந்தர் ஜி.பாஸ்கரன், முன்னாள் பதிவாளர் முத்துக்குமார், பதிவாளரின் நேர்முக உதவியாளர் சக்தி சரவணன் மற்றும் தொலைத்தூர கல்வி இயக்கத்தின் இயக்குநர் என்.பாஸ்கரன் ஆகிய நான்கு பேர் மீது 11 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


 

தமிழ் மொழி, கலாச்சாரம் உள்ளிட்ட ஆராய்ச்சிக்காக எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கி பல்கலைக்கழகத்தை தொடங்கினார். ஆனால் அந்த பல்கலைக் கழகம் ஊழலில் சிக்கித் தவிப்பது தமிழ் ஆய்வாளர்களையும், ஆர்வலர்களையும் தற்போது வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

அனுமதி இன்றி நடந்த ஜல்லிக்கட்டு; 10 பேர் மீது பாய்ந்த வழக்கு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Case against 10 people who conducted Jallikattu without permission

ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.