ADVERTISEMENT
தமிழகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ள நிலையில், மக்களை கரோனாவில் இருந்து பாதுகாக்க அரசு பல்வேறு வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது.
தமிழக காவல்துறையினர் ஊரடங்கு உத்தரவை மீறி அநாவசியமாக வெளியில் வருவோரை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை பகுதி காவலர்கள் ஊரடங்கு குறித்தும் மக்கள் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேண்டு வாத்தியங்களுடன், விழிப்புணர்வு பலகைகளை பிடித்துக்கொண்டு ஊர்வலமாக வந்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments