பரங்கிப்பேட்டையில் குடியுரிமை சட்டத்தை சவப்பெட்டியில் வைத்து ஊர்வலம்

தேசியக் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுநல அமைப்புகள் என அனைவரும் பல்வேறு விதமான போராட்டங்களை தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக நடத்தி வருகின்றனர்.

The procession in the coffin of citizenship law at Paranagpet

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 1000 த்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் சவ பெட்டியுடன் ஊர்வலமாக சென்றனர். சவப்பெட்டியை கையில் ஏந்திக்கொண்டு நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக பிரதமர் மோடி அமித்ஷாவையும் கண்டித்தும், குடியுரிமை சட்டம் தேவையில்லை என்றும், என்றென்றும் நாங்கள் இந்திய மக்கள் ஆகவே இருக்க விரும்புகிறோம் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

மேலும் இந்த சட்டத்தை சவப்பெட்டியில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதில் திமுக நகர செயலாளர் முனவர் உசேன் உள்ளிட்ட அனைத்து ஜமாத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் என அனைவரும் கலந்து கொண்டனர் பரங்கிப்பேட்டை முழுவதும் பதட்டமாக இருந்ததால் சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில்நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

citizenship amendment bill parangipettai
இதையும் படியுங்கள்
Subscribe