A prize of one crore rupees each for the medal winning Indian teams - Tamil Nadu Chief Minister's announcement!

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நேற்று (09/08/2022) மாலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் இந்தியா சார்பில் விளையாடி வெண்கல பதக்கங்களை வென்ற இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் பரிசைதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisment

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பொதுப்பிரிவில் விளையாடி வென்ற இந்திய பி அணி, மகளிர் பிரிவில் வென்ற இந்திய ஏ அணிக்கு தலா ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த இரு அணிகளும் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.