Skip to main content

மாதந்தோறும் காவலர்களின் பணிகளை பாராட்டி பரிசு-  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசத்தல்!

Published on 04/10/2019 | Edited on 04/10/2019

கடந்த சில மாதங்களுக்கு முன் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீஅபிநவ் பொறுப்பேற்றார். அவர் பொறுபேற்ற சில நாட்களில் சக காவலர்களின் பணிகளை கண்காணித்து அவர்களுக்கு அறிவுரை கூறுதல், பாராட்டு தெரிவித்தல். காவலர்களின் குடும்ப நல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்டவைகளுக்கு, கடலூர் மாவட்ட காவல்துறையினர் மத்தியில் நல்ல வரவேற்பும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் காவல்துறையில் சுனக்கமாக பணியாற்றும் சிலருக்கு இதேபோல் நாமும் அனைவர் மத்தியில் பாராட்டும், பரிசும் வாங்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதை பார்க்க முடிகிறது.

Prize in appreciation of the work of the policemen monthly   District COMMISSIONER of Police


 

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் சிறப்பாக செயல்பட்டு குண்டர் தடுப்புக் காவலில் எதிரிகளை கைது செய்த, காவல் ஆய்வாளர்கள்  புவனகிரி அம்பேத்கார், அண்ணாமலை நகர் தேவேந்திரன் , விருத்தாச்சலம்  சாகுல்அமீது ,நெய்வேலி டவுன்ஷிப்  ஆறுமுகம், நெய்வேலி தெர்மல் லதா, நெல்லிக்குப்பம் ரமேஷ் பாபு , காடாம்புலியூர்  மலர்விழி,  விருத்தாசலம் மதுவிலக்கு அமல் பிரிவு சுஜாதா ஆகியோர்களையும், அதேபோல் சிறந்த அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்ட சிதம்பரம் நகர் ஆய்வாளர் முருகேசன்,  கடலூர் OT உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, புவனகிரி உதவி ஆய்வாளர்  இளஞ்கோவன், நீதிமன்ற பணிகளில் சிறப்பாக செயல்பட்ட நில அபகரிப்பு பிரிவு ஆய்வாளர் செல்வி ஈஸ்வரி, உதவி ஆய்வாளர் அமலா, கருவேப்பிலங்குறிச்சி உதவி ஆய்வாளர் விநாயகமுருகன். 
 

மேலும் மாவட்டத்தில் மெச்சத்தகுந்த பணிபுரிந்த நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர்  ரமேஷ்பாபு ,உதவி ஆய்வாளர் சந்துரு, காவலர்கள் கிருஷ்ணகுமார், முரளி, கனகராஜ் ,சிதம்பரம் உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர்  ராஜா, பண்ருட்டி போக்குவரத்து காவல் பிரிவு காவலர்  ராஜதீபன்  உள்ளிட்டோர்களை பாராட்டி சான்றிதழ், பரிசுகள் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் சிறப்பித்துள்ளார். இதனால் காவல்துறையினர் மத்தியில் ஒவ்வொரு மாதமும் இதுநல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.