Skip to main content

தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன்!

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

Private schools should record for online classes - Central Zone IG Balakrishnan Advice!

 

தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அறிவுரை கூறியுள்ளார்.

 

அண்மையில் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் ஆன்லைன் வகுப்பின்போது மாணவிகளிடம் முறையற்று நடந்தது, ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான புகார்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தமிழ்நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பல்வேறு பள்ளிகளில் இதேபோல் துன்புறுத்தல்களுக்கு ஆளான மாணவிகள் காவல் நிலையங்களில் புகார் தெரிவித்துவருகின்றனர். புகார்களின் அடிப்படையில் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதை வலியுறுத்தி திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி யாக பொறுப்பேற்றிருக்கக்கூடிய பாலகிருஷ்ணன் நேற்று (08.06.2021) தனியார் பள்ளிகளோடு ஆன்லைன் வழியாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

 

Private schools should record for online classes - Central Zone IG Balakrishnan Advice!

 

அதில் தற்போது பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து வகுப்புகளையும் பள்ளி நிர்வாகம் பதிவுசெய்ய வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

 

மேலும், ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்போது அல்லது மாணவிகளின் செல்ஃபோன் எண்களைத் எடுத்து தனியாக அவர்களோடு பாலியல் தொடர்பான தகவல்களைப் பேசுவதோ அல்லது அவர்களை வேறு காரணங்களுக்காக வற்புறுத்துவதோ நடைபெற்றால் உரிய நடவடிக்கையைக் காவல்துறை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

 

ஆன்லைன் வகுப்புகளைப் பள்ளி நிர்வாகம் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும், ஆண் ஆசிரியர்களின் செயல்பாடு மாணவிகளிடம் எப்படி வெளிப்படுகிறது என்பதையும் அறிந்து பிரச்சினை எழுவதற்கு முன் அதனைச் சரி செய்திட வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளார்.

 

மேலும், மாணவிகள் மீது தொடர்ந்து பாலியல் தொடர்பான தொந்தரவுகள் கொடுக்கப்பட்டால், புகார் தெரிவிக்க  மாவட்டம் வாரியாக ஒரு அதிகாரியை நியமித்து, அவர்களுடைய செல்ஃபோன் எண்களையும் அவர் பதிவு செய்துள்ளார். எந்த நேரத்திலும் அதிகாரிகளை மாணவிகள் அழைத்து உதவி கேட்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது. 

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.