Skip to main content

பள்ளிக்கல்வி துறை அமைச்சரின் கவனத்திற்கு, கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் பள்ளிகளில் சேர மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க பொதுமக்கள் கோரிக்கை.

Published on 04/06/2019 | Edited on 04/06/2019

கல்வி கற்க  வாய்ப்பு மறுக்கப்பட்ட அனைத்துக் குழந்தைகளும் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் என்பதற்காக மத்திய அரசால் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் நுழைவு வகுப்புகளில் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இலவச சேர்க்கைக்காக தனியார் பள்ளிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த இடங்களில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். 

 

private school reservation in tamilnadu

 

 

அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு செலுத்தி விடும் என்று அரசு அறிவித்து தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 2019-20 கல்வி ஆண்டிற்கு கல்வி உரிமை சட்டத்தில் விண்ணப்பிக்க ஏப்ரல் 22-ந்தேதி முதல் மே 18-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது. அதன் அடிப்படையில் மக்கள் மத்தியில் சரியான விழிப்புணர்வு இல்லாததாலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதில் ஏற்பட்ட சர்வர் உள்ளிட்ட சிறு சிறு குளறுபடிகளாலும், தேர்தல் சமயம் என்பதாலும் விண்ணப்பிக்க முடியாமல் விட்டுவிட்டனர்.

உதாரனமாக கடலூர் மாவட்டத்தில் 368 நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 5,431 இடங்கள் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த இடங்களுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதில், மாவட்டத்தில் மொத்தம் 5,087 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. இதிலும், பல்வேறு காரணங்களால் 330 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

இதனால், 5,431 இடங்களுக்கு 4,757 பேர் மட்டுமே போட்டியில் உள்ளனர். அதிலும், சில பிரபல தனியார் பள்ளிகளுக்கு மட்டுமே அதிக போட்டி நிலவுகிறது. 

மேலும் இந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ப்பதற்கு மொத்தமுள்ள 5431 இடங்களுக்கு 4757 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். மொத்த இடங்களையும் நிரப்ப மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போன்று தமிழக அளவிலும் இந்த பிரச்சணை உள்ளது கூறப்படுகிறது.  

இதில் நன்கு கல்வி அறிவு பெற்று அரசு மற்றும் தனியார் துறைகளில் உயர் பணியாற்றி வருடத்திற்கு ரூ 5 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள் வருமான வரி சான்றிதழை தவறான முறையில் பெற்று கல்வி உரிமை சட்டத்தில் விண்ணபித்துள்ளதாக கூறப்படுகிறது. இதே போன்று கடந்த காலங்களில் விண்ணப்பித்து ஏழை மாணவர்கள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய இடத்தை தட்டிபறித்து அனைத்து வசதிகளும் உள்ளவர்களின் குழந்தைகள் கல்வி பயின்று வருகிறார்கள் எனவும் குற்றச்சாட்டு உள்ளது. இதனால் கிராம புறம் மற்றும் நகர் புறங்களில் வசிக்கும் ஏழை மாணவர்களின் நிலை, கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் கிராம புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் இதற்கு எப்படி விண்ணபிப்பது என்று விழிப்புணர்வு இல்லாமல் விட்டுவிடுவதாலும் இது போன்று நடக்கிறது. இதனை சம்பந்தபட்ட அதிகாரிகள் நன்கு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.