ADVERTISEMENT
ADVERTISEMENT
சென்னை கே.கே நகரில் இயங்கிவரும் பத்மா சேஷாத்திரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பின்போது ராஜகோபாலன் என்ற ஆசிரியர் பள்ளி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது, ஆன்லைன் வகுப்பில் தகாத முறையில் நடந்துகொண்டது போன்றவை தொடர்பான புகார்கள் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், பத்மா சேஷாத்ரி பள்ளியின் முதல்வர் கீதா, தாளாளர் ஷீலா ஆகியோர் குழந்தைகள் நல அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர். அவர்களிடம் குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Show comments