Skip to main content

வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்திருக்கும் தனியார் பள்ளி: நாகை ஆட்சியரிடம் விவசாயிகள் மனு!

Published on 30/09/2019 | Edited on 30/09/2019

வேதாரண்யம் அருகே வடிகால் வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டிய தனியார் பள்ளி நிர்வாகத்தால் 35 ஹெக்டேருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களில் சாகுபடி பணிகள் தொடர முடியாமல் பரிதவித்து வருவதாக ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்..

 Private school occupying drainage gutter: peasants petition to Nagai ruler

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதிக்கு உட்பட்ட கருப்பம்புலம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் செயல்பட்டு வரும் அகரம் என்கிற தனியார் பள்ளி, பழமை வாய்ந்த வடிகால் வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டியிருப்பதால், 35 ஹெக்டேருக்கு அதிகமான பரப்பளவில் விவசாய பணிகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வடிகால் வாய்க்கால் தனியார் பள்ளி நிர்வாகத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதால் மழை வெள்ளப்பாதிப்பில் பயிர்கள் மூழ்க கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் இந்த ஆண்டுக்கான சம்பா சாகுபடி பணிகளை தொடங்காமல் நாகை மாவட்ட ஆட்சியரிடம் இன்று நான்காவது முறையாக மனு அளித்தனர். 

 Private school occupying drainage gutter: peasants petition to Nagai ruler

"வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் பயிர்கள் மூழ்கும் அபாய நிலை ஏற்படுவதால் விவசாய பணிகளை தொடங்கவில்லை," என்று அந்த மனுவில் கூறியுள்ளனர் அப்பகுதி விவசாயிகள். மேலும்,"மழை காலத்திற்குள் ஆக்கிரமிப்புகள் முழுவதும் அகற்றி தனியார் பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், " என்றும் கூறியுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.