Skip to main content

தனியார் பள்ளி விடுதியில் பிளஸ்2 மாணவி தூக்கிட்டு தற்கொலை!

Published on 01/02/2023 | Edited on 01/02/2023

 

private school 12th standard students lost their life

 

நாமக்கல் அருகே, தனியார் பள்ளி விடுதியில் பிளஸ்2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.     

 

சென்னை முகப்பேரைச் சேர்ந்த தியாகு கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் சுவாதி(17) நாமக்கல்  மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி, பிளஸ்2 படித்து வந்தார். ஜன.30ம் தேதி அதிகாலை வழக்கம்போல் பள்ளி வளாகத்தில் சிறப்புப் பயிற்சி வகுப்பு நடந்தது. 

 

இந்த வகுப்பிற்கு வந்திருந்த சுவாதி மீண்டும்  தன்னுடைய விடுதி அறைக்குத் திரும்பினார். மற்ற மாணவிகள் வழக்கம்போல் காலையில் வகுப்புக்குச் சென்றுவிட்ட நிலையில் சுவாதி மட்டும் வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகத்தின் பேரில் விடுதி ஊழியர்கள், சக மாணவிகள் சுவாதியின் அறைக்குச் சென்று பார்த்தனர். அறைக் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, சுவாதி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டது தெரிய வந்தது.    இதைப் பார்த்த ஆசிரியர்கள், சக மாணவிகள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  

 

இதுகுறித்து தகவல் அறிந்த ராசிபுரம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. மாணவி, எதனால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணம் தெரியவில்லை. அவர் தங்கியிருந்த அறையில் தற்கொலை குறிப்பு கடிதம் இருக்கிறதா என சோதனை நடந்து வருகிறது. 

 

சக மாணவிகள், வகுப்பு ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோரிடமும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பொதுத்தேர்வு மீதான அச்சத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? ஆசிரியர்களின் அழுத்தம் காரணமா? என்ற கோணத்திலும்  விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, உடற்கூராய்வு முடிந்ததை அடுத்து மாணவியின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு வாரத்திற்குள் மாணவியின்  உடற்கூராய்வு அறிக்கை கிடைத்து விடும் என காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. தனியார் விடுதி அறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராசிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது