Advertisment

இயங்குமா தனியார் ஆம்னி பேருந்துகள்... ஆம்னி பேருந்து சங்கத்தின் மாறுபட்ட கருத்தால் குழப்பம்!

Private Omni buses running ... Confused by the Omni Bus Association's different opinion!

இன்று இரவு முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisment

இன்று இரவுமுதல் மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10.00 மணி முதல் காலை 04.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது தனியார் மற்றும் பொதுப் போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதி இல்லை. மருத்துவம் போன்ற அவசரத் தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும். பெட்ரோல், டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். விமானம், ரயில் நிலையங்களுக்குச் செல்ல மட்டும் இரவு நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதனால் காலை 4 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்குள்பயணத்தை முடிக்கும் வகையில் அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் தனியார் ஆம்னி பேருந்து சங்கம் சார்பிலும்இதேபோல்பகலில் பயணத்தை முடித்துக்கொள்ளும்வகையில் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் எனக்கூறப்பட்டது. இந்நிலையில் பகலில் பேருந்தை இயக்கினால்கூட்டம் குறைவாக இருக்கும், பயணிகள் பயண நேரத்திற்குத்திட்டமிட்டுவருவது கடினம் என்பதால் ஆம்னி பேருந்துகளை இயக்குவது கடினம் எனத்தனியார் பேருந்து சங்கத்தின்ஒருசாரார்அறிவித்துள்ளனர். இரவு நேர ஊரடங்கு விலக்கப்பட்ட பின்தான்பேருந்துகளைஇயக்க முடியும் என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தைச்சேர்ந்த ஜெயம்பாண்டியன்தெரிவித்துள்ளார்.

corona virus lockdown omni bus Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe