சென்னையில் சில பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
ஏற்கனவே அரசு மினி பேருந்துகள் சென்னையில் பல இடங்களில் இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக சோழிங்கநல்லூர், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், மணலி ஆகிய பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து தனியார் மினி பேருந்து சேவைநடைமுறைக்கு வரும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.