Skip to main content

நடு ரோட்டில் தாக்கிக்கொண்ட தனியார் பேருந்து ஓட்டுநரும் அரசுப் பேருந்து ஓட்டுநரும்; ஆத்தூரில் பரபரப்பு

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

 Private government bus drivers hit the road in Attur

 

சேலம் மாவட்டம் ஆத்தூரில் தனியார் பேருந்து ஓட்டுநரும், அரசு ஓட்டுநரும் பேருந்தை சாலையில் நிறுத்திவிட்டு பொதுமக்கள் முன்பு தாக்கிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்திற்குத் தினமும் அரசு மற்றும் தனியார் என மொத்தம் சுமார் 400 பேருந்துகள் வந்து செல்லும் நிலையில், பேருந்துகளை இயக்கும் நேரம் குறித்து தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளுக்கு இடையே அவ்வப்போது வாக்குவாதம் நிகழ்வது வாடிக்கையாக இருந்து வந்திருக்கிறது.

 

இந்த நிலையில் ஆத்தூரிலிருந்து ஈரோடு செல்லும் தனியார் பேருந்து, பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தது. அப்பொழுது ராசிபுரத்திலிருந்து ஆத்தூர் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் “எங்கள் நேரத்தில் நீங்கள் ஏன் பேருந்து இயக்குனீர்கள்”  என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த வாக்குவாதமானது தொடர்ந்து கைகலப்பானது. இதனால் அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர், தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் சாலையிலேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பொதுமக்கள் இரு தரப்பையும் சமாதானப்படுத்த முயன்றனர். இது தொடர்பாக ஆத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து; 5 பேர் பலியான சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
incident for tirupur vellakoil car and govt bus

திருப்பூரில் அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே ஓலப்பாளையம் என்ற பகுதியில் திருப்பூரில் இருந்து திருச்சிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே போன்று திருப்பூரில் உள்ள நல்லிக்கவுண்டன் வலசு என்ற பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தனது காரில் குடும்பத்தினர் 6 பேருடன் பயணம் செய்துள்ளார். இவர்கள் திருக்கடையூரில் உள்ள கோவிலுக்கு ஆன்மிக பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் தான் ஓலப்பாளையத்தில் இன்று (09.04.2024) அதிகாலை நேருக்கு நேர் எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே  காரில் பயணித்த இளவரசன் (வயது 26), சந்திரசேகரன் (வயது 60), சித்ரா (வயது 57), அறிவித்ரா (வயது 30) மற்றும் 3 மாத பெண் குழந்தை சாக்சி ஆகிய 5 பேரும் உயிரிழந்தனர். மேலும் சசிதரன் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வெள்ளக்கோயில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.