Skip to main content

அபராதம் விதித்த தனியார் நிதி நிறுவனத்திற்கு பூட்டு போட்டு போராட்டம்!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். பொருளாதார ரீதியாகவும் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  


அதையடுத்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் ரிசர்வ் வங்கி, 'தனியார் வங்கிகள் மற்றும் நுண் கடன் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனுக்கான தவணை தொகைகளை ஊரடங்கு காலமான 3 மாதம் மற்றும் அதற்கடுத்த 3 மாதங்களுக்கு தவணைத்தொகை கேட்டு நிர்ப்பந்தப்படுத்தக்கூடாது' என அறிவுறுத்தியுள்ளது. 

ஆனால் பெரும்பாலான தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் தவணைத்தொகைகளையும், கடந்த 2 மாதங்களுக்கான தவணைத்தொகையுடன் அபராத வட்டியும் கேட்டு நிர்ப்பந்தப்படுத்துகின்றன. 

அதேபோல் செல்போன், இருசக்கர வாகனம் போன்றவைகளுக்கு 2 மாதங்களாக தவணை வசூலிக்காத நிறுவனங்கள் தற்போது ஜுன் மாதம் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் பல நிறுவனங்கள் தவணைக்கான காசோலைகளை வாடிக்கையாளருக்கு அறிவிப்பு செய்யாமலேயே வங்கியில் போட்டு செக் பவுன்ஸ் தொகையை வசூலிக்கின்றன. அதிலும் சில நிறுவனங்கள் ஒரே செக்கை ஒரே நாளில் அடுத்தடுத்த நாள்களில் மீண்டும் மீண்டும் செக்கை போட்டு செக் பவுன்ஸ் தொகை என வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே அவர்களது கணக்கில் இருக்கும் சிறு தொகையையும் எடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. 

 

 


இந்நிலையில் புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வீதியில் அமைந்துள்ள பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் கடன் பெற்றவர்களை தங்களது கடன் தொகையை செலுத்த நிர்ப்பந்தம் செய்வதாகவும், வங்கியில் பணம் இல்லாத சூழ்நிலையிலும் ECS செக்கை பயன்படுத்தி check pounce என்ற முறை குறைந்தபட்சம் 590 ரூபாய் என்கிற பெயரில் 5 முதல் 15 தடவைகள் பண பிடிக்கப்பட்டு உள்ளதால் அது தாங்கள் கட்டவேண்டிய 2000 ரூபாய் தொகையை விட அதிகளவு பிடித்தம் செய்யப்படுவதாகவும் கூறி தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி பஜாஜ் பைனான்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டுப் போட்டு பயனாளிகள் போராட்டம் நடத்தினர். பின்னர் அங்கு வந்த பெரியகடை காவல் துறையினர் பைனான்ஸ் அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தலை புறக்கணிக்கிறேன்” - அதிமுக வேட்பாளர் ஆவேசம்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
"I will boycott the election" - AIADMK candidate's obsession

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் புதுவை அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் வாக்கிற்கு ரூ. 500, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் ரூ. 200 கொடுத்துள்ளனர். இதன் மூலம் மக்களை கொச்சைப்படுத்தும் தேர்தலாக மீண்டும் மாற்றி விட்டனர். இந்த தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டிய தேர்தல். இந்த தேர்தல் அடுத்து வரும் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் வழிவிட வேண்டிய ஒரு தேர்தல் ஆகும். மீண்டும், மீண்டும் பணம் கொடுத்துதான் வெற்றி பெறுவேன். மீண்டும், மீண்டும் மக்களை ஏமாற்றிகொண்டு தான் இருப்பேன் என்று நினைக்கிறார்கள். எனவே நான் இந்த தேர்தலை புறக்கணிக்கிறேன்” என ஆவேசமாகத் தெரிவித்தார். 

Next Story

தமிழகத்தில் தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Election campaigning in Tamil Nadu ends with evening

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவின்போது விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

அதே சமயம் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் உள்ள 92 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.