private cement factory lorry driver incident karur

சிமெண்ட் ஆலையில் லாரி மோதி லாரி ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும்ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கரூர் மாவட்டம் புலியூரில்தனியார்சிமெண்ட் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் (வயது 46) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை லாரியில் இருந்து சாம்பல் லோடு இறக்கும் போது பின்புறமாக வந்த மற்றொரு லாரி கண்ணன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

Advertisment

இதையடுத்து அவரை சக பணியாளர்கள் சிமெண்ட் ஆலைக்குசொந்தமான ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள்பரிசோதனை செய்து பார்த்ததில் ஏற்கனவே அவர் இறந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கண்ணனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பசுபதிபாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.