Skip to main content

'கரோனா சிகிச்சை முடிந்து வீட்டுக்கு செல்ல ஆம்புலன்ஸ் கிடைத்தால் நல்லது...'-மருத்துவமனை வாசலில் தவித்தவரின் கோரிக்கை!!

Published on 22/07/2020 | Edited on 22/07/2020
private ambulance service... request from people

 

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் 108 ஆம்புலன்ஸ் வந்து சம்மந்தப்பட்ட நபரை அழைத்து செல்லும். முழுமையாக பாதுகாப்பு உடைகள் அணிந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அழைத்து சென்று சம்மந்தப்பட்ட கரோனா சிகிச்சை மையங்களில் இறக்கிவிட்டு செல்கின்றனர். ஆனால் அந்த ஊழியர்களுக்கு போதிய தனிமைப்படுத்தல் இல்லை. அதேபோல சிகிச்சை முடிந்த பிறகு அவர்களை அவர்களின் வீட்டிற்கே கொண்டு போய் விட்டு வந்தனர். ஆனால் தற்போது நிலைமை மாறி அழைத்து வருவதுடன் திருப்பி கொண்டு போய்விட போதிய ஆம்புலன்ஸ் இல்லாததால் மருத்துவமனை வாசலிலேயே காத்திருக்கிறார்கள்.

 

புதுக்கோட்டை ராணியார் கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் கூறும்போது, கடந்த வாரம் கரோனா தொற்று என்று சிகிச்சைக்கு அழைத்து சென்றார்கள். சிகிச்சை முடிந்தது, வீடு திரும்ப வேண்டும். வழக்கம் போல எங்களை அழைத்து வந்த வாகனத்தில் ஏற்றி சென்று வீட்டில் விடுவார்கள் என்று துணிமணிப் பைகளை எடுத்துக்கொண்டு காத்திருந்த நேரத்தில்தான் சொன்னார்கள், உங்களை ஏற்றிச் செல்ல வாகம் இல்லை அதனால் உங்கள் உறவினர்களை அழைத்து எப்படியாவது ஊருக்கு போங்கள் என்று. (அதாவது கரோனா தொற்று உற்றவர்களை ஏற்றவே வாகனம் பற்றாக்குறை உள்ளதை உணர்ந்தோம்.)

 

ஒரு ஆட்டோவில் போக கூட வழியில்லை. கரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்கள் என்றதுமே எங்களை ஏற்ற மறுக்கிறார்கள், காரும் அப்படித்தான். அதனால் பல மணி நேரம் காத்திருந்து ஊருக்கு தகவல் சொல்லி உறவினர்களும் எங்களை ஏற்றி செல்ல பயந்து கால தாமதம் செய்து பிறகு வந்து ஏற்றி சென்றார்கள்.

 

இப்படித்தான் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கறம்பக்குடியில் இருந்து ஒரு இளம் பெண்ணை தொற்று உள்ளது என்று ஆம்புலன்சில் ஏற்றி வந்து பிறகு அவருக்கு இல்லை என்றதும் இரவு 10 மணிக்கு மருத்துவமனைக்கு வெளியே போக சொல்லிவிட்டார்கள். அந்த இளம் பெண் சொந்த ஊருக்கு போக வழியின்றி அழுதும் பயனில்லை. கரோனா வாகனத்தில் வந்ததால் உறவினர்கள் கூட ஏற்ற மறுத்துள்ளனர். அதிகாலை 2 மணிக்கு பிறகு 30 கி.மீ செல்ல  ரூ. 10,000 வாடகை பேசி ஒரு கார் ஏற்பாடு செய்து அதிகாலை 3 மணிக்கு கறம்பக்குடி சென்றுள்ளார்.

 

வசதி இல்லாத பலரும் நடந்துதான் ஊருக்கு வரவேண்டிய நிலை உள்ளது. அதனால் கரோனா தொற்று உள்ளவர்களை 108 ஆம்புலன்ஸ் ஏற்றி சென்றாலும் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு செல்பவர்களை தனியார் மருத்துவமனை மற்றும் தன்னார்வ ஆம்புலன்ஸ்கள் ஏற்றி சென்று, வீட்டில் விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்றார்.

 

மாவட்ட நிர்வாகம் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளரிகளிடம் பேசி சிகிச்சை முடிந்து வீட்டுக்கு செல்வோரை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.