Advertisment

''டீ வாங்கி தரியா... துப்பாக்கி லோடு பண்ணிருக்கா...''-நடுவழியில் கைதியின் அலப்பறை

prisoner incident with police

Advertisment

விசாரணைக் கைதி ஒருவர்போலீசாரிடம்'டீ வாங்கி தரியா... இறங்கி ஓடி விடவா... முடிந்தால்என்னைசுட்டுப்பாருங்க''எனகுதர்க்கமாக வாக்குவாதத்தில் ஈடுபடும்வீடியோகாட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால்ஆசாரிபள்ளம்அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது வழக்கம். அதன்படி அண்மையில்போலீஸ்வேனில் கைதிகளை ஏற்றிக்கொண்டு ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புடன்ஆசாரிபள்ளம்அரசுமருத்துவமனைக்குசென்று கொண்டிருந்தனர். அந்த கைதிகள்கூட்டத்தில் இருந்தபோக்சோவழக்கில் கைது செய்யப்பட்டதிங்கள்சந்தைபகுதியைசேர்ந்ததனிஷ்என்ற இளைஞர், நடுவழியில்போலீசாரிடம்டீ வாங்கிகொடுக்கசொல்லி அடம் பிடித்துள்ளார். அப்பொழுதுபோலீஸாரிடம்வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர்,போலீசார்வைத்திருந்ததுப்பாக்கியைதொட்டு 'இந்த துப்பாக்கியில் குண்டு இருக்கா அண்ணா...லோடுபண்ணிருக்கியா...நாவேணாவண்டியை விட்டு இறங்கி ஓடுறேன்முடிஞ்சாஎன்னசுடுங்க...'' என அலப்பறையில் ஈடுபட்டான். ஆனால் பாதுகாப்பு கருதி நடுவழியில் வண்டியை நிறுத்தி டீ குடிக்க முடியாது என்று தெரிவித்தபோலீசார், சிறைக் கைதியின் அலப்பறைக்கு எதிர்ப்பும் தெரிவிக்காமல்அவனைச்சமாதானப்படுத்த முயன்றனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிவைரலாகிவருகிறது.

Kanyakumari police Prisoners
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe