Skip to main content

ஆயுள் கைதியைத் தப்பிக்க வைத்த சிறை வார்டன் பணிநீக்கம்

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

prison warden who escaped the life prisoner was fired

 

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் ஹரி. ஆயுள் தண்டனைக் கைதி. இவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நன்னடத்தையின் அடிப்படையில் அவருக்கு சிறைத்துறை நிர்வாகம் சிறை விடுப்பு (பரோல்) வழங்கியது. இதையடுத்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு 3 நாள்கள் பரோலில் சென்ற அவர், விடுப்பு முடிந்த பிறகும் சிறைக்குத் திரும்பாமல் தலைமறைவானார். 

 

இதையடுத்து  சிறைத்துறை காவலர்கள் அவரை தீவிரமாக தேடி வந்தனர். சிறை வாயில் முன்பு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான  காட்சிகளை ஆய்வு செய்தபோது அவர், மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வரும் ராமகிருஷ்ணன் என்பவருடன் அவருடைய மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்றது தெரிய வந்தது. கைதியை தப்பிக்க வைத்ததாக, உடனடியாக ராமகிருஷ்ணன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். விசாரணையில், சிறைத்துறை அலுவலர்கள் கைதி ஹரியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்த தொல்லை தாங்க முடியாமல் தான் தலைமறைவாகிவிட்டதாக சிறைத்துறை அலுவலர்களுக்கு அலைபேசி மூலம் குரல் பதிவு அனுப்பி உள்ளார்.     இதையடுத்து, கைதிகளை சிறை விடுப்பில் செல்ல அனுமதிக்கும் பிரிவில் பணியாற்றி வரும் அலுவலர், கைதியுடன் அலைபேசியில் பேசியவர் உள்ளிட்ட மூன்று பேரிடம் கோவை சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் விசாரணை நடத்தினார். ஆனாலும் அவர்கள் மீது எந்த  நடவடிக்கையும் பாயவில்லை.

 

இது தொடர்பாக கோவை மத்திய சிறை கூடுதல் எஸ்பி சதீஸ்குமார் விசாரணை நடத்தினார். இதில், ஏற்கனவே பணியிடைநீக்கம் செய்யப்பட்ட  வார்டன் ராமகிருஷ்ணனுக்கும், தலைமறைவான கைதி ஹரிக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த விசாரணை அறிக்கை, சேலம் மத்திய சிறை எஸ்பி தமிழ்ச்செல்வனிடம் வழங்கப்பட்டது. அதையடுத்து ராமகிருஷ்ணனை சிறை  நிர்வாகம் உடனடியாக நிரந்தர பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மேலும், தலைமறைவான ஆயுள் கைதி ஹரியை பிடிக்க சென்னை காவல்துறையிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.