Skip to main content

பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி, மனைவியோடு தூக்கிட்டு தற்கொலை!!!

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

நன்னிலம் அருகே பரோலில் வெளியில்வந்த ஆயுள் தண்டனை கைதி மனைவியுடன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
 

thiruvarur


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகில் உள்ள விசலூரை சேர்ந்தவர் சாமிநாதன் (38). இவருக்கு சரஸ்வதி (33) என்ற மனைவியும், சந்தோஷ் (11) , ஸ்ரீஹரி (13) என்ற இரு மகன்களும் உள்ளனர்.

இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டு தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் சிறை தண்டனை பெற்று வருகிறார். இந்தநிலையில் கடந்த 14 ந் தேதி முதல் மூன்று நாட்கள் பரோலில் வீட்டிற்கு வந்தார். பரோல் முடிந்து இன்று மீண்டும் சிறைக்கு திரும்பவேண்டிய நிலையில் நேற்று இரவு சாமிநாதனும், அவரது மனைவி சரஸ்வதி தூக்குபோட்டு இறந்துள்ளனர்.

இருவரும் இறந்து தூக்கில் தொங்கியதைக் கண்ட அவரது இரண்டாவது மகன் அலறியடித்து வீட்டிற்கு வெளியே வந்து கதறியுள்ளான். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இரண்டு குழந்தைகளும், எதுவும் புரியாமல் தாய், தந்தைகளை இழந்து அனாதைகளாக அழுது புரண்டுவருவது, பார்ப்பவர்களின் மனதை கணக்கவைத்துள்ளது. இருவரின் தற்கொலை குறித்து, நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரோலில் வெளிவந்த கைதி மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.