Skip to main content

இபிஎஸ்க்கு சேலத்திலும், ஓபிஎஸ்க்கு பாளையங்கோட்டையிலும் சிறைச்சாலை தயார்-அமமுக வேட்பாளர் பகீர்

Published on 31/03/2019 | Edited on 31/03/2019

முதல்வருக்கு சேலத்திலும் துணைமுதல்வருக்கு பாளைங்கோட்டையில் ஓ.பி.எஸ்க்கு சிறைசாலை தயார் அமமுக வேட்பாளர் பகீர் ‘

 

பெரம்பலூர் அமமுக வேட்பாளர் தொட்டியம் ராஜசேகர் இவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து தமிழ்மாநில காங்கிரஸ் அடுத்த அதிமுக தற்போது அமமுக கட்சிக்கு மாறியவர். இவர் அந்த பகுதியில் பெரும்பான்மையாக உள்ள முத்திரையர் சமூகத்தை சேர்ந்தவர். ஏற்கனவே தொட்டியம் - முசிறி பகுதியில் செல்வாக்கான நபர் என்பதாலும் அதிமுக சார்பில் முசிறியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சிவபதிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பதால் அமமுகவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

 

ammk

 

எப்போது சர்ச்சைகுரிய கருத்துகளை பொதுகூட்டங்களில் பேசுவதை வழக்கமாக கொண்டவர். 1 வருடத்திற்கு முன்பு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து தான் ஜெயித்தோம் என்று ஊழியர் கூட்டத்தில் பேசியவர் பிறகு அடுத்த நாளே நான் அப்படி பேசவில்லை என்று மறுத்தார்.

 

இந்த முறை பெரம்பலூர் எம்.பி. தொகுதி வேட்பாளர் என்பதால் சமயபுரம் பகுதியில் செயல்வீரர்கள் கூட்டத்தில் இவர் பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அம்முக வேட்பாளர்  வெற்றி பெற்றால் ஓபிஎஸ்க்கு பாளையங்கோட்டை, இபிஎஸ்க்கு சேலம், வீரமணிக்கு வேலூர், வேலுமணிக்கு கோயமுத்தூர் சிறைச்சாலைகளை தயார்படுத்தி் வைத்துள்ளோம்.  அம்மா மக்கள் முன்னேற்ற கழக பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் பேச்சு  திருச்சி மாவட்டம் சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது.

 

 

 

இந்த கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் வேட்பாளர் ராஜசேகர் மேலும் பேசியதாவது..

 

 

திமுக அதிமுக போன்ற கட்சிகள் தேர்தல் தொடர்பான உறுப்பினர்களை மற்றும் பூத் கமிட்டி ஏஜெண்டுகளை நியமிக்கவில்லை ஆனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு பூத் கமிட்டிக்கு 30 பேர் வீதம் அனைத்து தொகுதிகளுக்கும் பூத் கமிட்டி அமைத்து உள்ளனர் ஒரு பூத் கமிட்டி உறுப்பினர் 10 வாக்குகள் சேர்த்தால் அந்த 10 வாக்குகளும் அம்மா அப்பா தங்கை அண்ணன் உள்ளிட்ட உறவினர்கள் என பத்து வாக்காளர்களை ஒரு பூத் கமிட்டி உறுப்பினர் சேர்த்தால் தொகுதிக்கு ஒரு லட்சம்  வாக்கு நமது கட்சிக்காரர்கள் உடைய வாக்கு பதிவாகும். 

 

 

இதுபோன்ற உத்தியை தான் நடந்து முடிந்து வெற்றி பெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில்  பயன்படுத்தினோம் அதே போல தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த உத்தியைப் பயன்படுத்தி 40 தொகுதிகளிலும்  அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் வெற்றி பெற உள்ளோம்.

 

 

அதேபோல ஏப்ரல் 18ஆம் தேதி 18 எம்எல்ஏவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தமிழக முதல்வராக அம்மாவின் ஆட்சியை அமைக்க உள்ளோம்.  அதே போல புரட்சி தலைவி அம்மாவிற்கு துரோகம் செய்த இபிஎஸ், ஓபிஎஸ் பஞ்ச பரதேசி நாய்களும், அமைச்சர்கள் வீரமணி, வேலுமணி ஆகியோர் விரைவில் சிறை செல்ல உள்ளனர். அதற்காக ஜெயிலில் இடமும் தயார் நிலையில் உள்ளது என்று பேசினார்.

 

இந்த ஆலோசனை கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் மனோகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு” - டிடிவி தினகரன் மனைவி கலகல பேச்சு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வலம் வருகிறார்கள். அதே சமயம் பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சாரம் செய்யப்போவதாகவும்,  எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் சொல்லி இருந்தார். 

His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

அதன் அடிப்படையில் தான் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தனது கணவருக்காக தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, “குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள். சின்னத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவருக்கும் சின்னத்தை எடுத்து சொல்லுங்கள். ஏனென்றால் இதற்கு முன் போட்டியிட்டபோது வேறொரு சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டதால் இதை சொல்கிறேன். குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு”என கலகலப்பாக பேசி வாக்கு சேகரித்தார்.

Next Story

'யார் உங்கள் பிரதமர் வேட்பாளர் என்று கேளுங்கள்?' - டி.டி.வி.தினகரன்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
'Ask who is your prime ministerial candidate?'-TTV Dinakaran speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழனிசெட்டிபட்டி பகுதியில் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''சாதம் வடிக்க வேண்டும் என்றால் குக்கரில் தான் வடிக்க வேண்டும். குக்கரை பார்த்த உடனே டிடிவி தினகரன் ஞாபகம் வர வேண்டும். இந்த முறை என்னை வெற்றிபெறச் செய்வீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் குக்கர் ஜெயிக்கணும். எப்படி ஆர்கே நகரில் ஜெயிச்சு டெபாசிட் போக வைத்ததோ அப்படி பணம், காசு எல்லாவற்றையும் தாண்டி குக்கர் ஜெயிக்க வேண்டும்.

இன்னும் சில பேர் ஓட்டு கேட்க வருவார்கள். மோடி தான் இந்தியாவிற்கு மூன்றாவது முறையாக பிரதமராக வர இருக்கிறார். இந்த தேர்தல் பாராளுமன்றத்திற்கான தேர்தல். யார் இந்தியாவுடைய பிரதமர் என்பதற்கான தேர்தல். இந்த தேர்தலில் மோடிதான் எங்களுடைய பிரதமர் என்று ஓட்டு கேட்கலாம். மற்ற கூட்டணிகள் யாரைச் சொல்லி ஓட்டு கேட்கப் போகிறது? உதயசூரியனில் யாரைச் சொல்லிக் கேட்க போகிறார்கள்? நீங்கள் வந்தால் கேட்க வேண்டும். உங்களுக்கு யாருப்பா பிரதமர் வேட்பாளர் என்று கேட்க வேண்டும். இன்னொரு கட்சி இரட்டை இலையை தூக்கிக்கொண்டு வரும். அவங்க என்ன பழனிசாமியை பிரதமராக்க போறாங்களா?  திமுக வேட்பாளர் கூட எத்தனை அமைச்சர்கள் வந்தாலும் அவர்களிடம் கேளுங்கள் யார் உங்க பிரதமர் வேட்பாளர் என்று, ஜனநாயக நாட்டில் கேட்கலாமே?''என்றார்.