தமிழ்நாடு சிறைத்துறை சார்பில் இன்று (23.6.2023) காலை 11.30 மணியளவில்சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் சிறை சந்தை எனும் வளாகத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். அதையடுத்துசிறைத்துறை அலுவலக ஊழியர்களுக்குஉடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். மேலும் 'சிறகிதழ்' நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. அப்போதுதமிழ்நாடு சிறைத்துறை டி.ஜி.பி அம்ரேஷ் பூஜாரி, டிஐஜிக்கள் முருகன், கனகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisment