Skip to main content

சிறைப்பணியாளர்களை மிரட்டும் சிறை உளவுப்பிரிவு ! 

Published on 13/07/2019 | Edited on 13/07/2019

 


வெளி உலகில் தவறு செய்யும் மனிதர்கள் திருந்தும் நோக்கத்தோடு சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்களுக்கு சேவை செய்யும் வேலையை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அந்த கைதிகளை கண்காணிக்க வேண்டியவர்கள் கைதிகளோடு கூட்டு சேர்ந்து கொண்டு சிறை பணியாளர்களை பழி வாங்குகிறார்கள் என்று சிறைச்சாலையில் உள்ள மூத்த பணியாளர்கள் நக்கீரனிடம் குமுறினார்கள். இதை விரிவாக அப்படியே தருகிறோம்.

 

p

 

சிறைத்துறையில் பணி புரிந்து வரும் (டெபுட்டேஷன் ) உளவு மற்றும் விழிப்பு பிரிவில் 23 பேர்கள் காவல்துறையை சார்ந்தவர்கள். மாற்றுபணியில் பணி புரிய அனுப்பப்படும்  இவர்கள் வெளியில் இருந்து வருபவர்கள் மூன்றாண்டுகள் மட்டுமே சிறைக்குள் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்பது அரசாணை எண் 111 சொல்கிறது. 

 

ஆனால் சிறைத்துறையில் மட்டும் சிலர் சுமார் 12 ஆண்டுகளாக பணியாற்றி வருவதும், எந்த நோக்கத்திற்காக அரசாணை எண் 23 ன் படி பணியமர்த்தப்பட்டார்களோ அதனை செய்யாமல், சிறை பணியாளர்கள் மீது அவதூறான தகவல்களை துறைத் தலைமைக்கு அனுப்பி பணியாளர்களை நீண்ட தூரம் இடமாற்றம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

இதனால் சிறை பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்படுவதுடன் அவர்களது குழந்தைகளின் கல்வி மிக மோசமாக பாதிக்கப்படுகிறது. தங்களுக்கு தேவையான அல்லது சாதகமான பணியாளர்களை அவர்கள் விரும்பும் இடத்திற்கு இடமாற்றம் செய்யவேண்டும் என்பதற்காகவும் சில தவறான, பொய்யான, எதுவும் கிடைக்காத போது ஜாதிய பிரச்சனை எனக்கூறி தவறான அறிக்கை கொடுத்து பணியாளர்களை தெற்கும், வடக்கும், என இடமாற்றம் செய்கின்றனர். 

 

சிறையில் பணியாற்றும் சில அதிகாரிகளின் ஆலோசனையுடனும் இந்த நாடகம் அரங்கேறுகிறது என்று குமுறுகிறார்கள். அத்தோடு தீவிரவாத, நக்ஸலைட்டுகள், ரவுகள் உள்ளிட்ட கைதிகளை கண்காணித்து அவர்களது நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்காமல் சிறைக்காவலர்களை கண்காணிக்கவே செய்கிறார்கள். இவர்கள் இப்படி சுயநலமாக செய்படுவதால் தான் பட்டப்பகலில் புழல் மத்திய சிறை ஒன்றில் இரண்டு ஆயுள் தண்டனை கைதிகள் சக கைதிகளால் கொலை செய்யப்பட்டார்கள். 

 

பல வழக்குகள் நிலுவையில் இருந்த ஒரு விசாரணைக்கைதி பதிவேடுகளை அவனாகவே திருத்தி பிணையில் விடுவிக்கப்பட்டார். தப்பியோடிய நிகழ்வும், சரணடைந்த கொலை குற்றகைதி மூன்றே நாளில் பிணையில் விடுவிக்கப்பட்டதும், வட இந்திய திருட்டு வழக்கு கைதியை விடுதலை செய்தும், விடுதலை செய்யப்பட்டவர்கள் சிறையில் இல்லாத நிலையிலும் அவர்களுக்கு ஆயுத படையில் வழிக்காவல் கேட்ட வினோதமெல்லாம் புழல் சிறை 2 ல் நடைபெற்று உள்ளது.

 

சிறைப்பணியாளர்களின் பணிக்கு பாதுகாப்பே முக்கியமானது. விதிப்படி காவல்துறையினர் சிறைக்குள் அனுமதிக்க கூடாது. ஆனால் அவர்கள் செல்போனுடன் சிறைக்குள் உலாவருவதும், சிறை சார் நிலைப் பணியாளர்களை மிரட்டுவது, என அனைத்து நடவடிக்கைகளும் நடந்து கொண்டிருக்கிறது. 

 

3 வருடம் தான் duputation duty ஆனால் 12 வருசமா காவல்துறையில் இருந்து சிறைத்துறையில் பணி செய்கிறார்கள் நல்லா வருமானம் கிடைக்கிறது . இதனால் அதிகாரிகள் துணையோடு சிறைத்துறை பணியாளர்களை மிரட்டியே பணம் சம்பாதித்து இங்கேயே இருக்கிறார்கள். 

 

கைதிகளை கண்காணிக்க தான் இவர்கள் பணி கைதிகள் ஏதாவது சதி வேலை செய்யும் முன் முன்கூட்டியே நடக்க இருப்பதை கண்டறிந்து சிறை அதிகாரிகளிடம் தகவல் கொடுக்கணும் ஆனால் இவர்கள் சிறை காவலர்களை பலி வாங்கும் நோக்கத்தோடு பணியாளர்கள் மீது பொய்யான தகவல் தலைமை இடத்துக்கு அனுப்பி பணியிட மாற்றம் செய்யும் அளவுக்கு அதிகாரம் எங்கு இருந்து வந்தது என்று தெரியவில்லை. இதனால் சிறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் சிறையில் பணிபுரியும் சிறை உளவு விழிப்பு போலீஸ் கும் மோதல் உருவாகும் நிலை உருவாக்கி உள்ளது என்கிறார்கள் சிறையில் உள்ள மூத்த பணியாளர்கள்.’’


 

சார்ந்த செய்திகள்

Next Story

9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; கட்டடத் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
25 years in prison for a construction worker for A 9-year-old girl was misbehaviour in vellore

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு பகுதியை அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (39). இவர் கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு, அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியைக் கடத்தி அருகில் உள்ள மாங்காய் தோட்டத்தில் கட்டிப் போட்டு சுரேஷ்குமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார், சுரேஷ்குமாரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கலைப்பொன்னி இந்த வழக்கில் நேற்று (15-03-24) தீர்ப்பளித்தார். அதில், சுரேஷ்குமார் மீது குற்றம் நிரூபணமானதால், அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், அபராதத் தொகையை கட்டத் தவறினால், கூடுதலாக 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

Next Story

எல்லாத்துக்கும் ஒரு ரேட்டு; லஞ்சப் புகாரில் சிறைத்துறை டி.ஐ.ஜி! 

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Bribery Complaint trichy prison DIG

திருச்சி மத்திய சிறையில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைக்குள் இருக்கும் கைதிகளுக்கு படிப்பும், தொழிற்கல்வியும், உளவியல் ரீதியாக அறிவுரைகளும் வழங்கப்பட்டு வந்தன. அதேபோல், இச்சிறைச்சாலைக்குள் 250 ஏக்கர் பரப்பளவிலுள்ள விவசாய நிலத்தில், இதற்கு முன்பு சிறை கண்காணிப்பாளர்களாக இருந்தவர்கள், கைதிகளைக்கொண்டு விவசாயம் செய்து காய்கறிகள், கீரை வகைகளை விளைவித்து, விற்பனை மற்றும் உணவகம் என்று பெரிய அளவில் வர்த்தகமே செய்துவந்தனர்.

ஆனால் தற்போது சிறைத்துறை கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள ஆண்டாள், கைதிகளுக்கு இதுபோன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை வழங்காமல், அலுவலகத்திற்கு வருவதும், அலுவலக ரீதியான பணிகளைச் செய்வதுமாக மட்டுமே தனது கடமையை முடித்துக்கொள்கிறார் என்று கூறப்படுகிறது. அதேபோல், சிறைத்துறையின் டி.ஐ.ஜி.யாக இருக்கும் ஜெயபாரதியும் கைதிகளின் நலனுக்காக பெரிய அளவில் எந்த பணிகளையும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. இரண்டு பெண் அதிகாரிகளும் பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை எந்த செய்தியாளர்களின் அழைப்பையும் எடுப்பதில்லை.

டி.ஐ.ஜி. மட்டும் தன்னால் முடிந்தவரை சம்பாதிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், திருச்சி மண்டலத்திற்குட்பட்ட 29 கிளைச் சிறைகளில், ஒவ்வொன்றிலிருந்தும் மாதாமாதம் ஐயாயிரம் ரூபாய் கொடுத்தாக வேண்டுமென்ற வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிறையிலுள்ள கைதிகளின் உணவுக்காக அரசு வழங்கும் படிக்காசு, சிறைக்குள் கைதிகளுக்கு தனிப்பட்ட சலுகைகள் செய்து தருவதற்கு தனியாக ஒரு ரேட் என்று கொடிகட்டிப் பறக்கிறார் டி.ஐ.ஜி. சமீபத்தில் கூட பட்டுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் என்ற விசாரணைக் கைதி பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக பட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் திருச்சி மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.

இந்நிலையில், தன்னை தஞ்சாவூர் சிறைக்கு அனுப்ப வேண்டுமென்று உளவுப் பிரிவு முதல்நிலை தலைமைக் காவலர் பிரபாகரனிடம் கேட்டுள்ளார். இத்தகவலை பிரபாகரன் சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதியிடம் சொன்னதோடு மட்டுமல்லாமல், செந்தில்குமாரிடமிருந்து டி.ஐ.ஜி.க்கு 50 ஆயிரமும், அவருக்கு 40 ஆயிரமும் பெற்றுக்கொண்டு அவரை தஞ்சை சிறைக்கு பத்திரமாக அனுப்பி வைத்துள்ள செய்தி, காவலர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

டி.ஐ.ஜி. ஜெயபாரதி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் கேட்டபோது, "முற்றிலும் தவறான தகவல். சிறைக்குள் யாராவது கிளப்பிவிட்ட புரளியாக இருக்கும்'' என்று தன் மீதான லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்தார்.

சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.