Advertisment

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தனியார் பள்ளி முதல்வர் கைது

Principal of private school arrested in pocso

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே செயல்பட்டு வந்த தனியார் பள்ளியின் முதல்வர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி அடுத்த ரெட்டணை பகுதியில் செயல்பட்டு வரும் சிபிஎஸ்இ தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரின் பெற்றோர்கள் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 14ஆம் தேதி புகார் அளித்திருந்தனர். அதேபோல் மற்றொரு மாணவியும் பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் பள்ளி முதல்வர் கார்த்திகேயன் மீது போக்சோவில் வழக்குபதிவு செய்துள்ள போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த வழக்கு விசாரணையில் மேலும் பல பள்ளி மாணவிகளுக்கு கார்த்திகேயன்பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த கார்த்திகேயனைஇன்று விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த தயாராகி உள்ளனர்.

Viluppuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe