Skip to main content

நாளை முதல் உயருகிறது ஆவின் பால் விலை... புதிய விலைப்பட்டியல் வெளியீடு

Published on 18/08/2019 | Edited on 18/08/2019

தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து தமிழகத்தில் ஆவின் பாலின் விலையையும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் சார்பாக தற்போது விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல் அடிப்படையில் நாளை விற்பனைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது 

ஆவின் நைஸ் எனப்படும் நீலநிற பாக்கெட்டில் உள்ள 50 மில்லி லிட்டர் பால் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 20க்கும், அதிகபட்ச விலை ரூபாய்  21.50 க்கும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் நைஸ் நீலநிற பாக்கெட் 1000 மில்லி லிட்டர் அட்டைதாரர்களுக்கு 40 ரூபாய், அதிகபட்ச விலை 43 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது.

 

 Prices of Avin's milk rising from tomorrow ... New Invoice Release


எஸ்எம் எனும் கொழுப்பு சத்து நிறைந்த  ஆவின் மேஜிக் பச்சை பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பால், 500 மில்லி லிட்டர் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 22.50 க்கும், அதிகபட்ச விலை ரூபாய் 23.50 வும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் கிரீம் பால் ஆரஞ்சு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பால் 500 மில்லி லிட்டர், அட்டைதாரர்களுக்கு 22 ரூபாய் 50 பைசாவும், அதிகபட்ச விலை 25 ரூபாய் 50 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் மேஜிக் ஐந்து லிட்டர் பாக்கெட் பாலின் விலை 225 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆவின் மூலம் தயாரிக்கப்படும் பால் கோவா, நெய் போன்ற பால் சார்ந்த அனைத்து பொருட்களின் விலை அடுத்த வாரத்திலிருந்து உயர்த்தப்படும் எனவும் தகவல்கள் வந்துள்ளது. 

அதேபோல் 1.5 சதவீதம் என குறைந்த கொழுப்புள்ள பால் 500 மில்லி லிட்டர் அட்டைதாரர்களுக்கு 19 ரூபாய் 50 பைசாவும், அதிகபட்ச விற்பனை விலை 20 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.