ADVERTISEMENT

முத்தரசனை சந்தித்த தமிழ்நாடு கடை கட்டிட வாடகைத்தாரர்கள் சங்கத் தலைவர்!

03:07 PM Oct 02, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT


தமிழ்நாடு கடை கட்டிட வாடகைதாரர்கள் சங்கத் தலைவர் கோவில்பட்டி ராதாகிருஷ்ணன் தலைமையில் கோவில்பட்டிஜெயராஜ், திண்டுக்கல் வெள்ளிமலை ஆலோசகர், சேலம் ஷேக், தாம்பரம் பிரபாகர் ஆகியோர் இந்திய கம்யூனிஷ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனை 28/09/2021 அன்று பாலன் இல்லத்தில் சந்தித்து தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்து, மனுவினையும் அளித்தனர்.

அரசுக்கு தங்களுடைய பிரச்சனைகளைக் கொண்டு சென்று நல்லதொரு தீர்ப்பினை பெற்றுத் தருமாறு வேண்டினர். முத்தரசனும் பிரச்சனைகளை ஏற்கனவே, அமைச்சரிடம் தெரிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, மறுபடியும் அமைச்சரைத் தொடர்பு கொண்டு வலியுறுத்துவதாக எடுத்துக் கூறினார். அமைச்சரை உடனே செல் போனில் தொடர்பு கொண்ட போது, அமைச்சர் முதலமைச்சரோடு ஓர் நிகழ்ச்சியிலிருந்ததால் தொடர்பு கிடைக்கவில்லை.

அமைச்சர் தொடர்பு கொள்ளும்போது நியாயமான வாடகையை முடிவு செய்ய அமைப்பதாகக் கூறிய உயர்கமிட்டி அமைப்பதைத் துரிதப்படுத்த வலியுறுத்துவதாகக் கூறினார். இந்த நிகழ்வின் போது தமிழ்நாடு கோயில் மனை குடியிருப்போர் சங்க மாநிலத் தலைவர் வி.அ.பாலசுப்பிரமணியனும், பொருளாளர் எஸ்.ஏழுமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT