Skip to main content

ஈரோடு புத்தகத் திருவிழா - 2023; ஏற்பாடுகள் தீவிரம்

Published on 14/07/2023 | Edited on 14/07/2023

 

Preparations for the Erode Book Festival are in full swing

 

திருவிழாக் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவோர், கூடாரம் எழுப்புவோர், ஒலி, ஒளி அமைப்போர், விளம்பரம் செய்வோர், புத்தகச்சுமை தூக்குவோர், சுகாதாரப் பணி மேற்கொள்வோர், நாற்காலிகள் போடுவோர், மின்பொறியாளர்கள், புகைப்படம் மற்றும் வீடியோ கலைஞர்கள், அச்சுப்பணி சார்ந்தோர், செக்யூரிட்டி, பார்க்கிங் என ஒப்பந்தக்காரர்கள் மற்றும் பணியாளர்களை உள்ளடக்கிய கூட்டம் மக்கள் சிந்தனை பேரவையின் சார்பில் நேற்று (13.07.2023) நடைபெற்றது.

 

இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவின் தனித்தன்மை பற்றியும், அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து புத்தகத் திருவிழாவின் சிறப்புக்கும் வெற்றிக்கும் மக்கள் பயன்பாட்டிற்கும் பாடுபட வேண்டியதன் அவசியம் பற்றியும் பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் விளக்கவுரையாற்றினார். பேரவையின் செயலாளர் ந.அன்பரசு வரவேற்றார். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஆர்.தங்கவேலு நன்றி தெரிவித்தார். கூட்டத்தில் பங்கேற்றோர் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

 

மேலும் வளரும் தலைமுறை, பள்ளிப் பருவத்திலிருந்தே பாடப்புத்தகங்களோடு சேர்த்து தரமான பொதுப் புத்தகங்களையும் வாசித்து அறிவிற்சிறந்தவர்களாகவும், பண்பில் மேம்பட்டவர்களாகவும் அறிவியல், இலக்கியம், வரலாறு,மொழியியல், அரசியல் போன்றவற்றில் ஆழத்தடம் பதித்து, உலகப் பார்வை உள்ளவர்களாகவும் பேச்சு, எழுத்து உள்ளிட்ட பல்வகைத் தனித்திறன்களை வளர்த்துக் கொள்பவர்களாகவும் விளங்க வேண்டும் என்பதே மக்கள் சிந்தனைப் பேரவையின் எதிர்பார்ப்பு; நம்பிக்கை. இந்த இலட்சியத்தை மனதில் கொண்டு மாணவர்களுக்கான பல்வேறு தனிச்சிறப்புத் திட்டங்கள் ஈரோடு புத்தகத் திருவிழாவின் தொடக்க காலத்திலிருந்தே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 

Preparations for the Erode Book Festival are in full swing

 

அவற்றுள் ஒன்று 'நூல் ஆர்வலர் சான்றிதழ் வழங்கும் திட்டம்’. அதன்படி ஈரோடு புத்தகத் திருவிழாவில் ரூ. 250க்கு புத்தகங்களை வாங்கும் மாணவர்களுக்கு நூல்களின் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் பொருட்டு விழா அரங்கிலேயே 'நூல் ஆர்வலர்′ என்ற சான்றிதழ் பேரவையின் சார்பில் வழங்கப்படுகின்றது. இத்திட்டம் பல ஆண்டுகளாக ஈரோடு புத்தகத் திருவிழாவில் நடைமுறையில் இருந்து வருகின்றது. பல்லாயிரம் மாணவர்கள் ஆண்டுதோறும் இச்சான்றிதழை பெற்று மகிழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.