மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபிரேமலதா விஜயகாந்த் பேசுகையில்,
ரஜினி, கமல் விவகாரத்தைஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகிறது. விமானநிலையங்களில் போற போக்கில் ஒரு வரியில் பேசுவதை கூட ஊடகங்கள் பெரியதாக்கிறது என்றார்.
நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு விஜயகாந்த் உதராணமாக இருக்கிறார் என்று சில வாரங்களுக்கு முன்பு கடந்த வாரம் தமிழக கைத்தறி அமைச்சர் பாஸ்கரன் பேசியது தொடர்பானகேள்விக்கு,
தமிழக அமைச்சரவையில் அப்படி ஒரு அமைச்சர் இருக்கிறார் என தெரியவில்லை. அவர் பெயரும் அவருடைய இலாகாவும் எனக்கு தெரியவில்லை என்றார்.
அதிமுக கூட்டணி கட்சியில் இருக்கும் தேமுதிக பொருளாளர் பதவியில் இருக்கும் பிரேமலதா விஜயகாந்த்க்குஅமைச்சர் விவரம் தெரியாது என கூறியது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.