Skip to main content

விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

premalatha vijayakanth pressmeet

 

நடிகரும், தே.மு.தி.க கட்சியின் தலைவருமான கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அதுகுறித்து தே.மு.தி.கவின் பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே சுதீஷ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், இன்னும் இரண்டு தினங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டால் போதும் எனக் மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். அவர் பூரண உடல் நலத்துடன் சிறப்பாக இருக்கிறார். மிகவும் குறைந்த வீரிய வைரஸ் தொற்றுதான் உள்ளது. அதற்கு உடனடியாக சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 100% பாதுகாப்பாக இருக்கிறார். 

வீட்டில் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டால் அது தொடர்பாக ஸ்டிக்கர் ஒட்டுவது வழக்கம். இன்று ஸ்டிக்கர் ஒட்ட இல்லத்திற்கு வந்த போது உங்கள் வீட்டுப் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்பட்டதே என்ற கேள்விக்கு,

 

premalatha vijayakanth pressmeet


நாங்கள் அரசின் எல்லா விதிமுறைகளையும் கடைப்பிடிப்போம். ஒட்டக் கூடாது என நாங்கள் யாருமே சொல்லவில்லை. அவர்கள் ஒட்டினார்கள் கீழே விழுந்து விட்டது. அதனால் அதை எடுத்துச் சென்று விட்டோம் எனக் கார்ப்பரேஷன் மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். நாங்கள் எப்போதுமே அரசாங்கத்தின் அனைத்து விதிகளையும்  மதிக்கக் கூடியவர்கள் என்பது எல்லாருக்கும் தெரியும் என்றார்.

 

இல்லையே வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறதே எனச் செய்தியாளர் ஒருவர் மீண்டும் கேட்க, அருகில் இருந்த எல்.கே.சுதீஷ் இதை நீங்கள் மாநகராட்சி ஊழியர்களிடம் கேளுங்கள் என்றார்.
 

Ad

 

அதன்பிறகு பேச்சைத் தொடர்ந்த பிரேமலதா,  

நாங்கள் எல்லோருமே கரோனா பரிசோதனை செய்து விட்டோம். எங்கள் யாருக்குமே கரோனா இல்லை. எங்களைவிட, அவர் வயதானவர் என்பதால் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. அதுவும் சரி செய்து விட்டார்கள். அடுத்த வாரம் வந்து விடுவார். இன்னும் ஓரிரு நாட்களில் வீடு வந்து விடுவார். அடுத்த வாரத்திலிருந்து அரசியல் பணிகளை அவர் ஆரம்பிக்கப் போகிறார். அடுத்த வாரத்தில் இருந்து ஆன்லைனில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு பேசவிருக்கிறார். தலைமைக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், தேர்தலுக்கான பணிகள் என அடுத்த கட்டப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம் என்றார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவர் என் பிள்ளை இல்லை இனி உங்களின் பிள்ளை'- பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'He is not my child not your child' - Premalatha Vijayakanth speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கு ஆதரவாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், '“விஜயபிரபாகரன் நினைத்திருந்தால் தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டிருக்கலாம். அவர் இந்த மண்ணின் மைந்தன் என்பதால், நம் சொந்த பந்தங்கள் உள்ள இந்த பூமியில், இங்குள்ள மக்களுக்காக,  தன் தந்தையின் கனவைச் சுமந்து கொண்டு விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.படித்தவர், பண்பாளர்,  இளைஞர், கருணை உள்ளம் கொண்டவர்,  மக்களுக்காக உழைக்க வேண்டுமென்ற நல்ல சிந்தனையோடு வந்துள்ளார்.

விஜயபிரபாகரன் என் பிள்ளை இல்லை;  இனி அவர்  உங்கள் பிள்ளை. அனைத்துத் தாய்க்குலத்தின் பிள்ளை. இன்னும் கல்யாணம் கூட ஆகல. உக்களுக்காக உழைக்க வந்திருக்கிறார். உங்கள் தலைமையில் தான் அவரது திருமணத்தை நடத்துவேன்.  எனது மகன் வெற்றி பெற்றால், தொகுதி முழுவதும் இலவச தையல் பயிற்சி மையம் அமைத்து,   பயிற்சி நிறைவு பெற்றபின், அனைவருக்கும் தையல் மிஷின் வழங்குவோம். படிக்காத, படித்த இளைஞர்களுக்கு இலவச கணினி பயிற்சி மையங்கள், தொகுதி முழுவதும் சொந்த செலவில் அமைப்போம். தீப்பெட்டி தொழிற்சாலை, பட்டாசுத் தொழிற்சாலை, ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் தீர்வு காணப்படும். மற்ற வேட்பாளர்களைப் பற்றி நான் பேசமாட்டேன்.

மற்றவர்களைக் குறைசொல்லி அதில் ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் நம் கட்சிக்கு இல்லை. நான் விருதுநகர் மக்களை நம்புகிறேன்.  நாங்கள் சென்னையில் இருப்பதாக நினைக்க வேண்டாம். இனிமேல்  விருதுநகரில் தான் இருப்போம். கேப்டனை நம்பியவர்கள் கைவிடப்பட்டதாக சரித்திரம் இல்லை. குடும்ப பாரம்பரிய சொந்த பந்தம், ரத்த பந்தம் இருக்கிறது விருதுநகர் தொகுதியில், விஜயபிரபாகரன் உண்மையாக உழைத்து, மாநில அளவில் முதன்மைத் தொகுதியாக கொண்டு வருவார். தமிழகம் முழுவதும் அதிமுக - தேமுதிக கூட்டணிக்கு அமோக வரவேற்பு உள்ளது. நான் பிரச்சாரத்துக்குச் செல்லும் இடத்திலெல்லாம்,  விஜயபிரபாகரனுக்கு  பிரச்சாரம் செய்யவில்லையா என்று கேட்பார்கள்.  அவர் என் பிள்ளை இல்லை.   அங்குள்ள லட்சக்கணக்கான தாய்மார்களின் பிள்ளை.  அவர்கள் பார்த்து கொள்வார்கள் என்று சொன்னேன். உங்களை நம்பி நானும்,  கேப்டனும்,  விஜயபிரபாகரனை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். எல்லாம் மொழியும் அவருக்கு தெரியும்.  அமைதியாக இருக்கிறார் என்று நினைக்க வேண்டாம், அவர் பயங்கர ‘ஷார்ப்’,  அறிவாளி,  நிச்சயமாக உங்களுக்காக  உழைப்பார்”என்று பேசினார். 

Next Story

அரசியல் வருகை குறித்த கேள்விக்கு சண்முகப்பாண்டியன் பதில்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
shanmuga pandian press meet

விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகப் பாண்டியன் சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது படைத் தலைவன் படத்தில் நடித்து வருகிறார். டைரக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில், உருவாகும் இப்படம் காட்டு யானைகளின் வாழ்வியலை மையப்படுத்தி ஆக்‌ஷன் ஜானரில் உருவாகிறது. யு. அன்பு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

இந்த நிலையில் இன்று சண்முகப் பாண்டியன் பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி பிரேமலதா விஜயகாந்துடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைகிறது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த இல்லாமல் முதல் பிறந்தநாளைக் காண்கிறார். அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவரிடம் விஜய பிரபாகரரை போல் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் பதிலளித்த அவர்,  “நான் இப்போதைக்கு சினிமாவில் இருக்கிறேன். அண்ணன் அரசியலில் இருக்கிறார். அப்பாவின் ஒரு துறையை அண்ணன் எடுத்துக் கொண்டார். இன்னொரு துறையை நான் எடுத்துக்கொண்டேன்” என்றார். 

இதனிடையே சண்முகப் பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறிய வீடியோ ஒன்றை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளனர் படைத் தலைவன் படக்குழு. அப்படக்குழுவினரும் சண்முகப் பாண்டியனோடு இணைந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.