கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சிதம்பரத்தில் தங்கியுள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். புதன் கிழமை சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில், நடராஜர் கோயில், கோவிந்தராஜா பெருமாள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து மதிய உணவை முடித்துக்கொண்டு நாகை மாவட்டத்திற்கு பிரச்சாரத்திற்கு சென்றார்.