கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழைப்பெய்துவருகிறது. குறிப்பாக சென்னையில் பெய்யும் மழையால் மாநகரின் தாழ்வான பகுதிகளிலும், சேதமடந்த சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், சாலையை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு தொற்றுநோய் வரும் அபாயமும் இருக்கிறது.
இன்னிலையில், சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டின் அருகே உள்ள சாலையில் மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை பிரேமலதா விஜயகாந்த் தனது சொந்த செலவில் சரிசெய்து வருகிறார். சீரமைப்பு பணிகளை அவரே முன்னிருந்து துவங்கிவைத்தார்.