Skip to main content

பிரேமலதாவுக்கு பாடம் புகட்டிய மாஜி கொ.ப.செ..!

Published on 24/05/2019 | Edited on 24/05/2019

 

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக மக்கள் நல கூட்டணியோடு கூட்டு வைத்ததை எதிர்த்து தேமுதிக திமுகவுடன் தான் கூட்டணி வைக்க வேண்டுமென கட்சிக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் அப்போது தேமுதிக எம்எல்ஏக்கள் ஆக இருந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஈரோடு எம்எல்ஏ சந்திரகுமார்,  சேலம் பார்த்திபன், திருவள்ளூர் சேகர் ஆகியோர். இவர்கள் தலைமையில் 10 மாவட்ட செயலாளர்கள் என தே.மு.தி.க. சந்திரகுமார் அணி என தனி அணி உருவானது.  அதன் பிறகு மூன்று எம்எல்ஏக்களும் தனி அணியாக திமுகவுடன் கூட்டணி அமைத்து தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டனர். தேர்தலில் தோல்வி ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் மூவரும் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

 

p

 

 திமுகவுக்கு சென்ற அவர்களுக்கு கட்சி பொறுப்புகளும் வழங்கப்பட்டது.  இந்த நிலையில்தான் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற இந்த மூவர் உட்பட நிர்வாகிகளை அக்கட்சியின் மகளிர் அணிச் செயலாளராகவும் கேப்டன் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் "இந்த சந்திரகுமார், பார்த்திபன், சேகர் இவர்கள் ஒரு செல்லாக்காசாக இருக்கப் போகிறார்கள்.

 

  இவர்களுக்கு இனிமேல் அரசியல் எதிர்காலமே இல்லை" என்று தேமுதிக மேடையில் பேசி வந்தார்.  இந்த நிலையில்தான் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவில் இருந்து வந்த பார்த்திபனுக்கு சேலம் தொகுதி வேட்பாளராக திமுக நிறுத்தியது. அந்த சேலம் தொகுதியின் பொருப்பாளராக அதே தேமுதிகவில் இருந்து வந்த ஈரோடு சந்திரகுமாரை தேர்தல் பணி பொறுப்பாளராக தி.மு.க. தலைமை நியமித்தது.

 

இதை ஒரு சவாலாக எடுத்து சந்திரகுமார் இந்த தொகுதியை எப்படியும் வெற்றி பெற்று தீருவது என்று கடுமையாக தொண்டர்களோடு உழைத்தார்கள்.  தங்களை செல்லாக்காசு அரசியல் அனாதை என்றெல்லாம் பேசிய பிரேமலதா விஜயகாந்த்திற்கு இந்த தொகுதி வெற்றி மூலம் பாடம் புகட்டுவோம் என்று உறுதி எடுத்து செயல்பட்டார்கள்.  அதன் வெளிப்பாடாக திமுக சேலத்தில் ஒரு லட்சத்து 47 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பார்த்திபன் திமுக எம்பி ஆக உருவாகி உள்ளார்.  இதைப்பற்றி சந்திரகுமார் நம்மிடம் கூறும்போது,  "தமிழகத்தில் அரசியல் எதிர்காலம் என்பது தளபதி மூலம்தான் நடக்க முடியும்.  தேமுதிகவில் இருந்து வந்த எங்களை அனாதைகள் என்றும் செல்லாக்காசு என்றும் பேசிய பிரேமலதா விஜயகாந்த் தான் இப்போது அரசியல் அனாதையாக இருக்கிறார்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'14+1 தரும் கட்சியுடன் தான் கூட்டணி' - பிரேமலதா விஜயகாந்த்

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
'Alliance only with the party that gives 14+1' - Interview with DMUDHIKA Premalatha Vijayakanth

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று (07.02.2024) காலை 10 மணியளவில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விஜயகாந்த்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 14 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தரும் கட்சியுடன் தான் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் மாவட்டச் செயலாளர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். புதியதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள். தேமுதிகவின் கொள்கை என்ன? சித்தாந்தம் என்ன? என்றெல்லாம் கேள்வி கேட்க வேண்டாம். அதையெல்லாம் விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும்போதே அறிவித்துவிட்டார்'' என்றார்.

Next Story

“விஜயகாந்த் இதை உணர்ந்துவிட்டால் அவர் பழையபடி வருவார்” - பிரேமலதா விஜயகாந்த்

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

“If Vijaykanth realizes this he will come back to his old self” – Premalatha Vijaykanth

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேட்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்காக கூட்டணிக் கட்சிகளான திமுக, விசிக போன்றவை களத்தில் இறங்கி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதேபோல், அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணிக் கட்சிகளான தமாகா, பாஜகவும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

 

இந்நிலையில் தேமுதிக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து தேமுதிக கட்சிசியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “திமுக, அதிமுக என இரு கட்சிகளும் ஊழல் செய்துள்ளது. திமுக அரசு நூல் விலையை கட்டுப்படுத்தவில்லை. டாஸ்மாக் கடைகளை அகற்றவில்லை. பால்விலை, சொத்துவரி, மின்கட்டணம் உயர்ந்து வருவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பொதுமக்களின் நலனில் அக்கறை செலுத்தாமல் 21 அமைச்சர்கள் ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ளனர். 

 

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். அது உங்களுடைய பணம். லஞ்சம், ஊழல் செய்து கோடிக் கோடியாக கொள்ளை அடித்த பணம். இன்று தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுக்கிறார்களே அதை வாங்கிக் கொள்ளுங்கள். மூக்குத்தி, கம்மல், கால் கொலுசு என்ன? எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். செயின் கொடு, வளையல் கொடு என பெண்கள் கேளுங்கள். இன்று தங்கம் விலை எங்கோ ஏறிவிட்டது. வந்த உடன் தங்க நகை கடன் தள்ளுபடி என சொன்னார்களே. செய்தார்களா. இருக்க இருக்க தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. தாலிக்குத் தங்கம் என சொன்ன திட்டத்தையும் முடக்கிவிட்டார்கள். அதுமட்டுமில்லை. அனைத்து நல்லத் திட்டங்களையும் நிறுத்தி மக்களை வஞ்சிக்கக் கூடிய ஆட்சி நடக்கிறது.

 

ஈரோடு கிழக்கில் தேமுதிக வெற்றி பெற்றால் விஜய்காந்த்திற்கு தைரியம் வரும். என் மக்கள் என்னை கைவிடவில்லை. என் மக்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள் என்ற தெம்பும் தைரியமும் விஜய்காந்த்திற்கு வந்து அதை அவர் உணர்ந்தால் பழையபடி விஜய்காந்த்தை நீங்கள் பார்ப்பீர்கள்” எனக் கூறினார்.