Skip to main content

அச்சுறுத்தும் நிபா வைரஸ்: தமிழக எல்லையில் முன்னெச்சாிக்கை நடவடிக்கை!

Published on 06/06/2019 | Edited on 06/06/2019

கேரளாவில் கடந்த ஆண்டு மே மாதல் நிபா வைரஸ் காய்ச்சல் தாக்கியதில் கோழிக்கோட்டில் 14 பேரும் மலப்புரத்தில் 3 பேரும் என 17 போ் பலியானாா்கள். இதில் இவா்களுக்கு சிகிச்சையளித்து வந்த லினி என்ற நா்ஸ்சும் பலியானாா். 
         

 Preliminary action on the Tamil Nadu border to prevent the spread of NIFA virus!

 

இந்த நிலையில் மீண்டும் நிபா வைரஸ் காய்ச்சல் தற்போது கேரளாவை அச்சுறுத்தி உள்ளது. இதில் எா்ணாகுளத்தை சோ்ந்த கல்லூாி மாணவா் ஒருவா் பாதிக்கப்பட்டு அவருக்கு அரசு மருத்துவ கல்லூாி மருத்துவமனையில் தனி வாா்டில் வைத்து சிறப்பு மருத்துவா்கள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த மாணவருடன் நெருங்கி பழகிய சக மாணவா்கள் 86 போ் கண்டறியப்பட்டு அவா்களையும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். 

 

 Preliminary action on the Tamil Nadu border to prevent the spread of NIFA virus!


           

இந்தநிலையில் கேரளாவில் பரவியுள்ள நிபா வைரஸ் தமிழகத்திலும் நுழைந்து விடக்கூடாது என்ற முன்னெச்சாிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக கேரளா எல்லை மாவட்டங்களான கன்னியாகுமாி, நெல்லை, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூா் ஆகிய மாவட்டங்களின் எல்லையில் நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


     

 Preliminary action on the Tamil Nadu border to prevent the spread of NIFA virus!

     

இதில் கன்னியாகுமாி மாவட்டத்தில் முன்னெச்சாிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியா் பிரசாந் வடநேரா சுகாதார அதிகாாிகளுடன் ஆய்வுகளை மேற்கொண்டாா். அதையடுத்து கேரளாவில் இருந்து குமாி மாவட்டத்துக்கள் நுழையும் வாகனங்கள் கடும் சோதனைக்குள் உட்படுத்தப்பட்டு வருகின்றன. இதேபோல் சுகாதாரத்துறை துணை இயக்குனா் மதுசூதனன் தலைமையில் சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு அவா்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள நேயாளிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். 

 

 Preliminary action on the Tamil Nadu border to prevent the spread of NIFA virus!


            

மேலும் வவ்வால், கிளி போன்ற பறவைகள் கடித்த பழங்களை மனிதா்கள்  உண்ணுவதை உடனடியாக தவிா்க்க வேண்டுமென்று மருத்துவதுறை அறிவுறுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.