Skip to main content

நாகையில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு வரும் பெண்கள் தொடர் இறப்பு!

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

நாகப்பட்டினம் அபிராமி சன்னதி தெருவில் இயங்கிவரும் சக்தி நர்சிங் ஹோம் என்கிற தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. எட்டாவது முறையாக பிரசவத்திற்கு வந்த ஒரு பெண் இறந்துபோனதால் பெரும் பரபரப்பானது.

 Pregnant womens died in private hospital;people protest


நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் பாத்திமா பீவி. நிறைமாத கர்ப்பிணியான இவரை அவரது உறவினர்கள் நாகை அபிராமி சன்னதி அருகே உள்ள சக்தி நர்சிங் ஹோம் என்ற தனியார் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக நேற்று சேர்த்துள்ளனர். இன்று காலை அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தநிலையில், தாய் பாத்திமா பீவிக்கு ரத்தம் குறைவாக இருப்பதாகவும், அவர் மயக்க நிலையில் இருப்பதாகவும் நீண்ட நேரமாக மருத்துவர் ராகிணி சமாளித்து வந்துள்ளார். பின்னர் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மருத்துவரிடம் பிரச்சனை செய்தபோது, மாலை 4 மணிக்கு பாத்திமா பீவி இறந்து விட்டார் என்ற செய்தியை மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. 

 

 Pregnant womens died in private hospital;people protest Pregnant women's died in private hospital;people protest


இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த பாத்திமா பீவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களும் என சுமார் 300 க்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனை முன்பு திரண்டு மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த உறவினர்கள் கற்களை வீசி தனியார் மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தி கண்ணாடி மற்றும் கதவுகளை அடித்து உடைத்தனர். அதனைத்தொடர்ந்து மருத்துவமனை முழுவதும் பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர். இதனால் அந்தபகுதியே பதட்டமானது.

 Pregnant womens died in private hospital;people protest


பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நாகை மாவட்ட காவல்துறை இணை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது உயிரிழந்த பாத்திமாபீவியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு தருவதாக மருத்துவமனை நிர்வாகம் உறுதி அளித்ததை தொடர்ந்து சடலத்தை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். 

"அடிக்கடி தவறான சிகிச்சை செய்து பலரது உயிரை காவு வாங்கும் தனியார் மருத்துவமனையை உடனடியாக மூட வேண்டும். மருத்துவர்களின் அலட்சியத்தால் பிரசவத்திற்கு வந்தவர்கள் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர், பெண் மருத்துவரான ராகினி குடிபோதையில் மருத்துவம் பார்க்கிறார்," என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.