Skip to main content

விருது பெற்ற அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையா? - பரிதாபமாக இறந்த கர்ப்பிணி

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

Pregnant woman passed away Aranthangi Government Hospital

 

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி வந்த பிறகு மாவட்ட மருத்துவமனையாக அறந்தாங்கி மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. மகப்பேறுகால இறப்புகளே இல்லாத அரசு மருத்துவமனையாக அறந்தாங்கி உள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டி விருது வழங்கினார். ஆனால் தற்போது மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றம் பெற்ற பிறகு கர்ப்பிணிகள் இறப்பு தொடங்கியுள்ளது. 

 

கடந்த 13 ந் தேதி அரசர்குளம் ஜோதி மீனா (26) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த நிலையில், ஜோதிமீனா உயிரிழந்தார். அதேபோல கூத்தாடிவயல் கிராமத்தைச் சேர்ந்த ராஜலெட்சுமி பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டு சுகப்பிரசவம் நடந்த நிலையில் ரத்தப்போக்கு நிற்காததால் புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு கர்ப்பபை அகற்றப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

பிரசவகால இறப்புகளே இல்லாத இந்த அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தரம் உயர்ந்த பிறகு இப்படி இறப்பு கணக்குகள் தொடங்குவது வேதனையாக உள்ளதாகக் கூறும் பொதுமக்கள் இன்று இறப்புக்கு காரணம் தவறான சிகிச்சையா? அப்படியானால் தவறான சிகிச்சை அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் மருத்துவமனை முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் தொடங்கியதும் அங்கு வந்த ஜெ.டி. ராமு உள்ளிட்ட அதிகாரிகள் சமாதானப் பேச்சுவாரத்தை நடத்திய பிறகு கோரிக்கைகளை மனுவாக பெற்றுச் சென்றுள்ளனர்.

 

அறந்தாங்கி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டாலும் தேவைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், சிறப்பு பிரிவுகள், உபகரணங்கள் பற்றாக்குறையாகவே உள்ளது. ஒப்பந்தப் பணியில் பல மாதங்களாக சம்பளமே கிடைக்காத ஊழியர்களைக் கொண்டே மருத்துவமனை இயங்கி வருகிறது. அதனால் இது போன்ற சம்பவங்களை தடுக்க அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி சிறப்பு பிரிவுகளை நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

அரசு மருத்துவமனையில் வீசும் துர்நாற்றம்; நோயாளிகள் குற்றச்சாட்டு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Bad smell wafting from Vaniyambadi Government Hospital

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியைச்  சேர்ந்தவர் சத்யா (30). கர்ப்பிணியான சத்யாவின் கரு கலைந்துள்ளது. இதனால் கடந்த வெள்ளிகிழமை அன்று மிகுந்த வயிற்று வலி ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  மேலும் மருத்துவமனையில்  சேர்ந்து வயிற்றை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.அதே வார்டில் சுமார் 7 நோயாளிகள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தினமும் காலையில் ஒரு ஊசியும் மாலையில் ஒரு ஊசியும் செலுத்தி விட்டு மாத்திரைகள் கொடுத்துவிட்டு செல்வதாகவும் நேற்று வரை வயிற்றை சுத்தம் செய்து உரிய சிகிச்சை அளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வார்டில் கட்டில்கள் மேலிருக்கும் போர்வைகள் சரியாக சுத்தம்  செய்யப்படாமல் ரத்தக் கரையுடன் இருப்பதாகவும் தங்கியுள்ள அறையின் கழிவறையிலிருந்து அதிகப்படியான துர்நாற்றம் வீசுவதால்,  அறையில் உள்ள அனைவரும்  துர்நாற்றம் தாங்க முடியாமல் இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உணவு உண்பதும்  உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.