Pregnant woman passed away

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது கல்லாத்தூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அன்புமணி-சகுந்தலா(26) தம்பதியினர். இவர்களுக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆன‌ நிலையில், 8 மாத பெண் குழந்தை உள்ளது. மேலும் தற்போது சகுந்தலா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த மூன்று நாட்களாக குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் சகுந்தலா மர்மமான முறையில் தூக்கில் தொங்கியுள்ளார். அதைக் கேள்விப்பட்ட சகுந்தலாவின் உறவினர்கள் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெயங்கொண்டம் காவல்துறையினர், சகுந்தலாவின் உடலைக் கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணையும் செய்து வருகின்றனர். மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த பெண் தற்கொலை செய்துகொண்டது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment