Skip to main content

சென்னை அரசு ஆஸ்பத்திரியில் மாயமான கர்ப்பிணி கண்டுபிடிப்பு! குழந்தை என்ன ஆனது??? EXCLUSIVE NEWS

Published on 18/12/2018 | Edited on 18/12/2018
ga21


 


சென்னை அரசு மருத்துவமனையில் மாயமான கர்ப்பிணி பெண், திருத்தணியில் கண்டுபிடிக்கப்பட்டார். ஆனால் குழந்தை என்ன ஆனது என்று தெரியவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் உள்ளனர். 

 

சென்னை திருவல்லிக்கேணி லால்முகமத் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுதாகர். கால் டாக்சி டிரைவர். இவர் தனது உறவினரான காயத்ரியை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் காயத்ரி கர்ப்பமானார்.  நிறைமாத கர்ப்பிணியான காயத்ரியை கடந்த 15ம் தேதி இரவு திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் சுதாகர் அனுமதித்தார். 

 

அப்போது காயத்ரியை பரிசோதித்த மருத்துவர்கள், இன்று (ஞாயிறு) அல்லது நாளை (திங்கள்) குழந்தை பிறக்கும் என்று சொன்னதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மனைவியை பிரசவ வார்டில் அனுமதித்துவிட்டு, அங்கு ஆண்களுக்கு அனுமதி இல்லை என்பதால் சுதாகர் இரவு வீடு திரும்பினார். 
 

 

மறுநாள் காலை, மனைவியை பார்க்க சுதாகர் வந்தபோது, பிரசவ வார்டில் மனைவி இல்லை என்றதும், அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளார். அப்போது காயத்ரி நடைப்பயிற்சிக்கு சென்றிருப்பதாக கூறியுள்ளார்கள். உடனே இவர் மருத்துவமனை முழுவதும் தேடி பார்த்துள்ளார். மருத்துவமனை முழுவதும் காயத்ரியை காணவில்லை. 

 

இதையடுத்து உறவினர்களுக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். உறவினர்களும் காயத்ரி இங்கு வரவில்லை. காயத்ரியை பற்றி தகவல் தெரியவில்லை என்று பதில் அளித்துள்ளனர். பின்னர் பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எனது மனைவியை காணவில்லை, என திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சுதாகர் புகார் அளிதார். 

 

gayathri


 

புகாரை பெற்ற போலீசார் இது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து மாயமான காயத்ரியை தேடி வருகின்றனர். 

 

இந்த நிலையில் காயத்ரி திருத்தணியில் உள்ளதாகவும், குழந்தை என்ன ஆனது என்று தெரியவில்லை என்றும் உறவினர்களுக்கு போன் செய்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டு அங்கு விரைந்துள்ளனர். திருவல்லிக்கேணி போலீசார், திருத்தணி போலீசாருக்கு தகவல் கொடுத்து அங்கு காயத்ரியை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி சொல்லிவிட்டு, அவர்களும் திருத்தணி விரைந்துள்ளனர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

'எனக்கு என்ன ஆசையா இப்படி நடக்க வேண்டும் என்று...' - விமர்சனத்திற்குப் பதிலளித்த தமிழச்சி தங்கபாண்டியன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tamilachi Thangapandian responded to the criticism

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும், பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜனும்,  நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்ச்செல்வி என்ற பேராசிரியரும், அதிமுக சார்பில் ஜெயவர்தனும் களத்தில் உள்ளனர். இந்த நிலையில், அண்மையாகவே கையில் ஸ்டிக் உடன் காலில் பேண்டேஜ் அணிந்தபடி தமிழச்சி தங்கபாண்டியன் தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட நிலையில், செய்தியாளர்கள் இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.

சமூக வலைத்தளங்களில் நீங்கள் கையில் வாக்கிங் ஸ்டிக் உடன் வருவது குறித்து விமர்சனங்கள் வைக்கிறார்கள். இதற்கு உங்கள் கருத்து என்ன எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''என்ன விமர்சனம் வைக்கிறார்கள். ஸ்டிக்குடன் நடக்க வேண்டும் என எனக்கு என்ன ஆசையா? உண்மையிலேயே எனக்கு புரியவில்லை. ஸ்டிக்கோடு நடப்பதற்கு யாராவது ஆசைப்படுவாங்களா? இது மிக மிக முக்கியமான தருணம். இந்த நேரத்தில் நான் நடக்கக்கூடாது ஓட வேண்டும். அப்படிப்பட்ட நேரத்தில் யாராவது ஸ்டிக்குடன் நடக்க வேண்டும் என அவசியம் இருக்கா? எனக்கு மம்தா பானர்ஜி மீதும் அவருடைய கொள்கை மீதும் மிகப்பெரிய மரியாதை உண்டு. இந்த மாதிரியான விமர்சனங்கள் வைப்பவர்களுக்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்'' என்றார்.