Skip to main content

என்.எல்.சி விபத்தில் இறந்தவரின் கர்ப்பிணி மனைவி கலெக்டரிடம் புகார்!

Published on 22/08/2020 | Edited on 22/08/2020
The pregnant wife of the person who died in the NLC accident complained to the Collector!

 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகேயுள்ள கொல்லிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார்.  என்.எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்த இவர் சமீபத்தில் நடந்த பாய்லர் வெடி விபத்தில் உயிரிழந்தார். அதையடுத்து அவரது மனைவி உஷாதேவிக்கு என்.எல்.சி. நிறுவனத்தில் நிரந்தர வேலை வழங்க ஏற்பாடு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் வேலை வழங்குவது தொடர்பாக அவரது மாமனார், மாமியார் இடையூறு ஏற்படுத்துவதாக கூறி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் உஷாதேவி புகார் மனு அளித்துள்ளார். 

 

அந்த மனுவில்,

“எனது கணவர் அருண்குமாருக்கும், எனக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. தற்போது நான் 6 மாத கர்ப்பிணியாக உள்ளேன். இதனிடையே எனது கணவர் அருண்குமார் என்.எல்.சி பாய்லர் வெடி விபத்தில் உயிரிழந்து விட்டார். அவர் உயிரிழந்ததற்கு இழப்பீடாக ரூ 30 லட்சம் இழப்பீட்டுத் தொகையும், எனக்கு என்.எல்.சி நிறுவனத்தில் நிரந்தர வேலையும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இழப்பீட்டு தொகையில் முதல் கட்டமாக சுமார் ரூபாய் 20 லட்சத்திற்கான காசோலை எனது பெயருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த காசோலையை எனது மாமனார், மாமியார் ஆகியோர் எனக்கு தெரியாமல் திருடி சென்று விட்டனர். இதனைக் கேட்க சென்ற என்னையும் கொலை செய்து விடுவதாகவும், வீட்டை விட்டு வெளியே போகுமாறும் அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர்.  அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று பயமாக உள்ளது. தற்போது கணவனை இழந்து வயிற்றில் 6 மாத குழந்தையுடன் பல்வேறு சிரமங்கள் அடைந்து வருகிறேன். 

 

இந்த நிலையில் என்.எல்.சி. நிறுவனத்தில் கருணை அடிப்படையில் எனக்கு வழங்க இருக்கும் வேலையை எந்த விதத்திலாவது தடுத்துவிடலாம் என எனது மாமனார், மாமியாரர் இடையூறு செய்கிறார்கள். எனது மாமனார், மாமியார் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு, நிறுவனம் அறிவித்த வேலையை எனக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்”   என குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

'இது என்ன நான்சென்ஸ் செயல்' - அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
nn

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கிருந்த காத்திருப்போர் அறையில் நோயாளிகளின் பயன்படுத்திய பழைய படுக்கைகள், கட்டில்கள் அடுக்கி இருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்து அதிகாரிகளை கண்டித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டார். பூஜையில் கலந்துகொண்ட கையோடு மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட காத்திருப்போர் அறை பூட்டப்பட்டிருந்தது. அதேபோல் அவர்களுக்கான கழிவறைகளும் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உமா, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டித்தார்.

'உங்களால் இதையெல்லாம் மெயின்டைன் பண்ண முடியாது என்றால் சொல்லி விடுங்கள். நான் மகளிர் சுய உதவி குழுவை வைத்து கட்டண கழிப்பிடமாக இதை நான் மாற்றி விடுகிறேன்' என கேட்டார். அதற்கு மருத்துவர்கள் இன்னும் டெண்டர் விடவில்லை என தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், டெண்டர் விடும்வரை நோயாளிகளின் உறவினர்கள் கழிவறைக்கு செல்லாமல் இருக்க முடியுமா? டெண்டர் விட்டால் தான் தலைவலியே. தேர்தல் வேலையை பார்ப்பதா டெண்டர் விடுவதா? என்று அதிருப்தி தெரிவித்தார்.

மீண்டும் இரவு செக் பண்ணுவதற்காக வருவேன் எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அதிரடியாக தெரிவித்துவிட்டு பிணவறை அருகே உள்ள காத்திருப்போர் அறைக்கு ஆட்சியர் சென்றார். ஆனால் அந்த கட்டிடம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உறவினர்கள் என்னதான் சொன்னாலும் அந்த காத்திருப்போர் அறையில் இருக்காமல் வெளியே இருக்கின்றனர் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருப்போர் அறையில் இப்படி கட்டில்களை எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தால் எப்படி? தேவைக்கு அதிகமாக கட்டிலை வாங்கிவிட்டு பின்னர் காத்திருப்போர் அறையில் போட்டுவைப்பது என்ன நான்சென்ஸ் செயல் என கேள்வி எழுப்பி விட்டு சென்றார்.