Skip to main content

மதுபானங்களை கடத்தி வந்தவரை சினிமா பாணியில் விரட்டிப்பிடித்த கர்ப்பிணி பெண் ஆய்வாளர்;

Published on 25/06/2021 | Edited on 25/06/2021

 

The imaginary female researcher who chased cinema-style until he smuggled alcohol;

 

காரைக்காலில் இருந்து நாகைக்கு மதுபானங்களைக் கடத்திவந்த நபரை சினிமா பாணியில் விரட்டிப் பிடித்து அசத்தியிருக்கிறார் மதுவிலக்குப் பிரிவு பெண் ஆய்வாளர். இடுப்பில் வைத்திருந்த கத்தியைக் காட்டித் தப்பிக்க முயன்ற கடத்தல்காரரைப் பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்துள்ளார்.

 

கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் அரசு டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கின்றன. இதனைச் சாதகமாக்கிக்கொண்ட சாரய வியாபாரிகள், கள்ளச்சாரயம் காய்சி விற்பதும், ஸ்பிரிட் பவுடரைக் கடத்திவந்து தண்ணீரில் கலந்து விற்பதும், காரைக்காலிலிருந்து மதுபானங்களைக் கடத்திவந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதும் வாடிக்கையாகவே இருந்துவருகிறது. 

 

வழக்கம் போலவே காரைக்கால் வாஞ்சூர் சோதனைச் சாவடியில் இன்று (25.06.2021) மதுவிலக்குப் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே, வேதாரண்யத்தை அடுத்துள்ள நாலுவேத பதியைச் சேர்ந்த முருகையன் என்பவர், இரண்டு பெரிய பைகளுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். முருகையனோ போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து நாகை மதுவிலக்குப் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் ஆய்வாளர் டோனிஸ் மேரி உள்ளிட்ட மதுவிலக்கு போலீசார், சாராயம் கடத்திச் சென்ற முருகையனை இருசக்கர வாகனத்திலேயே சுமார் ஏழு கிலோமீட்டர் துரத்திற்கு விரட்டிச் சென்று நாகை கடைவீதி அருகே மடக்கிப் பிடித்தனர். 

 

மதுபோதையில் இருந்த அந்த நபர் சாவிக் கொத்தில் இருந்த கத்தியைக் காட்டிப் போலீசாரைக் குத்திவிடுவதாக மிரட்ட, இதனைச் சுற்றி நின்று பார்த்த பொதுமக்கள், தப்பிச் செல்ல முயன்ற நபரை போலீசாருடன் சேர்ந்து மடக்கிப் பிடித்தனர்.  அவரிடமிருந்த டிராவல் பேக்கை சோதனை செய்ததில் 78 குவாட்டர் பாட்டில்கள், 12 ஃபுல் பாட்டில்கள் இருந்தன. 

 

முருகையனை கைது செய்த மதுவிலக்குப் போலீசார், அவரிடமிருந்து மதுபானங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். சினிமா காட்சியைப் போல் அரங்கேறிய சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்துவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Tamil Nadu fishermen released from Sri Lankan jail

தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி (6.03.2024) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அதோடு மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் மீனவர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று, அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். 

Next Story

தடையை மீறி கடலில் குளித்த மாணவி உயிரிழப்பு; தேடச் சென்ற மாணவர்கள் மாயம் 

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
A student who broke the ban and bathed in the sea lose their live; The students who went to look for magic

காரைக்காலுக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவிகளில் ஒருவர் கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற இரு மாணவர்களும் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவ - மாணவிகள் காரைக்கால் கடற்கரை பகுதிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது மாணவிகள் இருவர் தடையை மீறி கடலில் இறங்கிக் குளித்ததாகக் கூறப்படுகிறது. திடீரென தண்ணீரில் மூழ்கிய அந்த மாணவிகளை மீட்க மாணவர்கள் இருவர் கடலில் இறங்கினர். ஆனால் மாணவியை மீட்கக் கடலில் இறங்கிய இரண்டு பேரும் காணாமல் போயினர்.

இதுகுறித்து கடலோர காவல் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் மற்றும் அதிகாரிகள் காணாமல் போன மாணவர்களைத் தேடி வருகின்றனர். தடையை மீறி கடலில் இறங்கிய மற்றொரு மாணவி மீட்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். கல்லூரி மாணவி தடையை மீறி கடலில் இறங்கிக் குளிக்க நேர்ந்தபோது ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவமும், தொடர்ந்து தேடச் சென்ற மாணவர்கள் காணாமல் போன சம்பவமும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.